எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் முறைப்படி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வாசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பிரிந்து வந்து மீண்டும் தமாகாவை தொடங்கினார்கள்.
இதன் அறிமுக கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமாகாவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி கடந்த 5 மாதங்களாக நடைபெற்றது. சுமார் 43 லட்சம் உறுப்பினர்கள் மார்ச் மாதம் வரை சேர்ந்திருந்தனர். இக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் தேர்தல் முறைப்படியாக நடைபெற்றது. தமாகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான ஞானதேசிகன், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் ஆகியோர் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர்.
தேர்தல் அதிகாரி ஞானதேசிகன் பேசும் போது ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை வழங்கி இருப்பதாகவும், வேறு யாரும் தலைவர் பதவியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்கள் மனு செய்யலாம் என்று அறிவித்தார். அப்போது மண்டபத்தில் திரண்டிருந்த நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்களும் எங்கள் ஒரே தலைவர் ஜி.கே.வாசன் தான் என்று குரலெழுப்பினார்கள்.
இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு ஜி.கே.வாசனை முன்மொழிவதாக கூறினார். அதை தமாகா மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வழிமொழிந்தார். இதை தொடர்ந்து என்.எஸ்.சி. சித்தன், கார்வேந்தன், ராமசுப்பு, கோவை தங்கம்,முக்தா சீனிவாசன், லட்சுமி ஆல்பர்ட், அசன் அலி, ராணி, கோவை மகேஸ்வரி, சாருபாலா தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் ஜி.கே.வாசனை தலைவராக முன்மொழிந்து வழிமொழிந்து பேசினர். இதையடுத்து ஜி.கே.வாசன் தமாகா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பி.எஸ்.ஞானதேசிகன் அறிவித்தார். இதையடுத்து முன்னணி தலைவர்கள் பலரும் ஜி.கே.வாசனை வாழ்த்தி பேசினார்கள்.
கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி.கே.வாசனுக்கு ஆளுயர மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்களும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். தமாகா பொதுக்குழுவை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து வானகரம் வரையிலும் வழிநெடுக கொடிகள், தோரணங்கள், கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக் குழுவுக்கு சுமார் 1500 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.ஆயிரம் பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர 3000 மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பொதுக்குழு கூட்டத்தை கண்டு களித்தனர். இவர்களுக்கு வசதியாக மண்டபத்தின் வெளிப்புறத்தில் பந்தல் அமைக்கப்பட்டு தொலைக்காட்சிகள் அமைத்து பொதுக்குழு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.ரங்கராஜ், ஜான்ஜேக்கப், மூப்பனாரின் நண்பர் முக்தா சீனிவாசன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தொட்டியம் ராஜசேகர், டாக்டர் ராமன், ராம்பாபு, அசன் அலி,குமாரதாஸ், மதுரை ராஜேந்திரன், கோவை மகேஸ்வரி மற்றும் முனவர் பாட்ஷா, இல.பாஸ்கரன், கோவிந்தசாமி, யுவராஜ், நெடுஞ்செழியன், கொட்டியம் ஏ.முருகன், பிஜு சாக்கோ, கத்திபாரா ஜனார்த்தனம், சைதை மனோகரன் உள்பட ஏராளமானோர் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்