எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஊராட்சிகளை வலுப்படுத்தி மின் ஆளுகை திட்டங்களை சிறப்பாக கையாண்டதற்காக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை பிரதமர் மோடியிடமிருந்து தமிழக அரசின் சார்பில் உள்ளாட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் பேடி பெற்றுக்கொண்டார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பானநிர்வாகத்திற்காக ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற்கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்) உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்.ஜி.டி), ஊராட்சிகளுக்கான தேசியவலைத் தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துக்கள் விவர தொகுப்பு மற்றும் ஊராட்சிஅளவில் திட்டமிடலுக்கான பிளான் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென்பொருட்களைஉருவாக்கி செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கண்ட மின்னணு ஆளுகைதிட்டங்களை செவ்வனே செயல்படுத்தும் பொருட்டு ரூ.79.50 கோடி செலவில் கணிப்பொறி, மின்னாக்கி, பிரிண்டர் மற்றும் அகண்ட வரிசை இணையதள இணைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஆளுகை திட்டங்களை சிறப்பா செயல்படுத்தும் மாநிலங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இ-பஞ்சாயத்து புரஸ்கார விருது என்ற ஒரு விருதினை ஏற்படுத்தி ஆண்டு தோறும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2014-15-ம் ஆண்டில் மின்னணு ஆளுகை திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது மற்றும் ரூ.20 லட்சத்திற்கான ரொக்கப் பரிசினை தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது. மேற்கண்ட விருதினை மாண்புமிகு பாரத பிரதமரிடமிருந்து திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அரசு செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, 24.4.2015-ம் நாள் புதன் டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் பெற்றார்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிக பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது என்ற ஒரு விருதினை உருவாக்கியுள்ளது. 2014-15ம் ஆண்டு மேற்கண்ட விருதினை பெற தமிடிநநாட்டைச் சேர்ந்த 6 கிராம ஊராட்சிகள், இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி ஆகியவற்றை மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரொக்கப் பரிசாக ரூ.30 இலட்சம் மாவட்ட ஊராட்சிக்கும், ரூ.20 இலட்சம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் மற்றும் ரூ.8 இலட்சம் கிராம ஊராட்சிகளுக்கும் அந்தந்த ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படுகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து 24.4.2015-ம் நாள் புது டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் விருதினை பெற்றார்கள்.
கிராம சபையை சிறப்பாக நடத்தும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ராஷ்ட்ரிய கௌரவ் கிராம சபா விருது என்ற விருதினை 2012-ம் ஆண்டு முதல் உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த ஒரு ஊராட்சிக்கு விருதினை வழங்கி வருகிறது.
அதன்படி 2014-15-ம் ஆண்டில், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரஉறட்டி கிராம ஊராட்சி மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.10 இலட்சம் ரொக்கப் பரிசு பெறுகின்றது. மேற்கண்ட ராஷ்ட்ரிய கௌரவ கிராம சபா விருதினை மாண்புமிகு மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து திருமதி.மு.ராஜேஸ்வரி தேவதாஸ் 24.4.2015-ம் நாள் புது டெல்லி விக்யான் பவன் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின மாநாட்டில் விருதினை பெற்றார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.