எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜெயலலிதா ஆணைக்களுக்கிணங்க அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் மாநில அவைத்தலைவர் ஆர்.வி.சிவா தலைமையிலும், கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம், அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடும்ப அரசியல், ஊழல், பொய் பிரச்சாரம், தேர்தலில் தில்லு முல்லு, பணபலம் ஆகியவற்றை நம்பியிருந்த மைனாரிட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத வகையில் விரட்டி அடித்த வீராங்கனை சிங்க நிகர் தலைவி, கழக நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றதற்கு கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் வாழ்த்த வயதில்லை. தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறோம்.
ஜெயலலிதா தமிழக முதல்வராக 3-வது முறையாக அறுதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடுமையாக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு.
மத்திய அரசு, கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 6 மாதத்தில் பலமுறை பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலையை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வின் பலனாக தினந்தோறும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த டீசல் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி வலியுறுத்தி கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தியமைக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கடுமையான கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மத்திய அரசு இந்த காப்பீட்டுத் தொகையை உடனடியாக குறைக்கவில்லை என்றால் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அனுமதி பெற்று மாநிலம் தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் 1.8.11 முதல் 30.9.11 வரை 2 மாதங்களுக்கு தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்தி ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியிலும், கழகத்திலும் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வையும் சாலை விதிகளையும் ஓட்டுநர்களும் பொதுமக்களும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நேரில் சென்று ஓட்டுநர்களுக்கும் பொது மக்களுக்கு துண்டுபிரசாரம் மூலம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரவு பகல் பாராமல் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்துவதற்கும் கழக வேற்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் எவ்வாறு பாடுபட்டார்களோ, அதே வகையில் உள்ளாட்சி தேர்தலிலும் தன்னலம் கருதாது கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாககளும் தொண்டர்களும் கழக வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாலர்களும் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.