எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை - 28 - சென்னையில் வரும் 30-ந் தேதி சி.பி.எம். கட்சியின் சார்பில் இலங்கை தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பங்கேற்கிறார். இதுகுறித்து கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;
தமிழக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டுமென்றும், சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்படுத்திட வேண்டுமென்றும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்கிட வேண்டுமென்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தினை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கிட வேண்டுமென்றும் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாராளமயக் பொருளாதாரக் கொள்கையினால் வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளது, உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஏழைஎளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்து வருகிறது. அதே சமயம் சட்ட விரோதமாக பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, உயர்மட்டத்தில் நடந்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முதல் சட்டவிரோத கனிம சுரங்கத்தொழில் மற்றும் இரும்புத்தாது ஏற்றுமதி ஊழல் வரை வரலாறு காணாத ஊழல்கள் வெளிப்பட்டுள்ளன.
இத்தகைய ஊழலை எதிர்த்தும், ஊழல் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திட
லோக்பால் மசோதாவை(பிரதமரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரும் வகையில்)
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது , தேசிய நீnullதித்துறை கமிஷன் அமைப்பது, தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருவது, பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுவதை தடுப்பது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றுவது ஆகியவற்றை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் ஜூலை 15 முதல் 21 வரை ஒருவார காலம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன. தமிழகத்தில் நுற்றுக்கணக்கான மையங்களில் தர்ணாஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மட்ட ஊழலை ஒழித்திடவும், அரசியலில் நேர்மையை வலியுறுத்தியும், இதற்கு ஆதரவாக மக்களை அணி திரட்டிடவும் தமிழகத்தில் மேற்கண்ட இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நிலமோசடியைத் தடுத்திடுக :
தமிழகத்தில் நிலப் பறிப்பு, நில மோசடி குறித்து 2000-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு
வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டு பலர் மீது புகார்கள் உள்ளன. இதற்கு முன்னரும் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நிலப்பறிப்பு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீண்டும் கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், ராஜிய உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசை வலியுறுத்துவதில்லை. எனவே, இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில்
நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட
வலியுறுத்தியும் இலங்கைத் தமிழர் சமஉரிமைஅரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவதென்று
மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
2011, ஜூலை 30 பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அகில இந்திய
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க் குடியரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தம்
உள்ளிட்டு பல தலைவர்களை பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை எடுத்திடுக :
மதுரை மாவட்டம், பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி
மாணவிகளை, பள்ளியின் தலைமையாசிரியர் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற செய்தி வன்மையான கண்டனத்திற்குரியது. மாணவிகளுக்கு நேர்ந்துள்ள கொடுமை அவர்களது கல்வி தொடர்வதிலேயே கூட தடைகளை ஏற்படுத்தும். மிகுந்த மனஉளைச்சலையும், nullநீண்ட கால தாக்கத்தையும் உருவாக்கும். எனவே, இந்த கொடூரமான குற்றத்தை இழைத்த தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சட்டப்படி குழந்தைகளையும், பெற்றோர்களையும அவர்கள்
குடியிருக்கும் இடத்திலேயே விசாரிப்பதுடன் தகுந்த பாதுகாப்பும் அளித்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உண்மையறியும்
குழுவினரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறியுள்ளனர். எனவே, அந்தப்பள்ளியில் பல குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை காவல்துறை ஒரு குழு அமைத்து விசாரித்து, வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென்றும், பொதுவாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.