எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.5 - தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளான நேற்று சபையில் 2011-12-ம் ஆண்டுக்கான முழு அளவிலான திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஜூன் 3-ம் தேதி தமிழக சட்டசபை முதல் முறையாக கூடியது. அப்போது கவர்னர் பர்னாலா மரபுப்படி சபையில் உரை நிகழ்த்தினார். அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் அவர் தனது உரையின் மூலம் அறிவித்தார். ஒருவாரம் நடைபெற்ற இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. காலை 10-30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டசபைக்கு வந்தனர். அதற்கு முன்பாக காலை 10-10 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவிடம் பட்ஜெட் அறிக்கையை கொடுத்து அவரிடம் வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு இருவரும் சபைக்கு வந்தனர். காலை 10-40 மணி அளவில் சபாநாயகர் ஜெயகுமார் சபைக்கு வந்தார். பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின. திருக்குறளை படித்து சபை நடவடிக்கையை தொடங்கிவைத்த சபாநாயகர் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று அறிவித்தார். அதன் பிறகு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். காலை 10-40 மணிக்கு தொடங்கிய அவரது உரை மதியம் 1.40 மணி வரை அதாவது கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்தது. அ.தி.மு.க. அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களை அவர் வாசித்தபோது இடையிடையே உறுப்பினர்கள் மேஜையை தட்டி கரொலி எழுப்பினார்கள். பட்ஜெட் உரையை முடித்த பிறகு முதல்வருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு தன் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்தார். முதல்வரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் போடப்படவில்லை. வரியில்லா பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-
2011-12-ம் ஆண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு கேபிள் டி.வி. விரைவில் மாநிலம் முழுவதும் தனது ஒளிபரப்பை தொடங்கும். திருக்கோயில் அன்னதானத்திட்டம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகிறது. இந்த திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். பூசாரிகள், ஓதூவார்கள்,இசைவாணர்கள் ஆகியோர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி புதியதாக தொடங்கப்படும். ஏற்கனவே இத்தொகுதிக்கு ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு பல திட்டங்களுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தாமல் இருக்க அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ. ஆயிரத்து 500-ம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரமும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மாணவிகளுக்கு பாவாடை,தாவணிக்கு பதிலாக சல்வார் கமீஸ் ஆடையும் மாணவர்களுக்கு அரைக்கால் டவுசருக்கு பதிலாக முழுக்கால் பேண்ட்டும் வழங்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி துவங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டு இரண்டு செட் சீருடையும் அடுத்தாண்டு 4 செட் சீருடையும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். தமிழகத்தில் புதிய 10 அரசு தொழிற்பயிற்சி மையங்கள்( ஐ.டி.ஐ) அமைக்கப்படும். நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். திட்டமிட்டபடி அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுந்து, கோதுமைக்கு வழங்கப்படும் சலுகை விலைத்திட்டம் நீட்டிக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் மின் உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர மாவட்டங்களில் மீன்பதப்படுத்தப்படும் மையங்கள் அமைக்கப்படும். காவல்துறையை நவீனப்படுத்த ரூ. 54 கோடி ஒதுக்கப்படும். ஒரு லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள 75 சிறிய நகரங்களில் புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டம் அமுல்படுத்தப்படும். ஆதிதிராவிட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.200 மாத உணவுப்படியாக உயர்த்தி தரப்படும். இதேபோல் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் உயர்த்தி தரப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறாக பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக சபை தொடங்கியதுமே தி.மு.க.வினர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். தங்களை ஒரே வரிசையில் அமரவைக்க வேண்டும். சமச்சீர் கல்வி விவகாரம் போன்றவற்றை காரணம் காட்டி தி.மு.க. வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
3 மணிநேரம் பட்ஜெட் படித்த ஓ.பி.எஸ்.
அ.தி.மு.க. அரசு ஜெயலலிதா தலைமையில் பொறுப்பேற்ற பிறகு 2011-12-க்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10.40 மணிக்கு தாக்கல் செய்தார்.
10.40 மணிமுதல் 1.40 மணிவரை கொஞ்சமும் அசராமல் தொடர்ந்து 3 மணிநேரம் பட்ஜெட்டை படித்தார்.
பட்ஜெட் உரையை படித்து முடித்தவுடன் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார். மேலும் அனைத்து அமைச்சர்களும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைகொடுத்து வாழ்த்தும், பாராட்டையும் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.