எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஆக.- 16 - நாடாளுமன்றம் போன்ற அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்கவோ, கண்ணியத்தை குலைக்கவோ, மனம் அறிந்தோ, அறியாமலோ யாரும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வேண்டுகோள் விடுத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். ஊழலை ஒழிக்க ஒரேயொரு வழியோ, தீர்வோ இல்லை. அரசு நிர்வாகத்தின் வெவ்வேறு நிலைகளிலும் கண்காணிப்பும், வெளிப்படை தன்மையும் நிலவினால்தான் இது சாத்தியம். இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உரியது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டது. அரசு எந்திரம், சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் ஆகியவை அரசியல் சட்டம் வகுத்தளித்தபடி தங்களின் வரம்புக்குள் செயல்பட வேண்டும். ஒன்றையொன்று மிஞ்சப் பார்க்க கூடாது. ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செயல்பட்டால்தான் மக்கள் நலன் காக்கப்படும். ஒவ்வொரு அமைப்பின் நம்பகத்தன்மையும் அது செயல்படும் விதத்தை பொருத்தே அமைகிறது. அரசியல் சட்டப்படி ஏற்படுத்திய எல்லா அமைப்புகளையும், நாம் வலுப்படுத்த வேண்டும். சரியான முடிவுகளை எடுக்க உதவ வேண்டும். தவறும் பட்சத்தில் தவறுகளை திருத்தும் நடவடிக்கைகள் அவசியம். நமது நாடாளுமன்றம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் பல சட்டங்களை இயற்றியுள்ளது. எதிர்காலத்திலும் இயற்றும். மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மக்களும் மக்கள் அமைப்புகளும் விவாதித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுக் கருத்துக்களை எட்டலாம். பிறகு அவற்றை அரசின் கவனத்துக்கும் கொண்டு வரலாம். இதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
அதே சமயம் தங்களுடைய கருத்துக்களை மட்டும்தான் நாடாளுமன்றம் ஏற்க வேண்டும். அதுவே சட்டமாக்கப்பட வேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. நாட்டுக்கு உகந்த சட்டம் இயற்றும் வல்லமையும் அதிகாரமும் கொண்டது நாடாளுமன்றம். அதன் பணிகளில் மற்றவர்கள் குறுக்கிட முடியாது. ஊட்டச் சத்து குறைவால் பெண்கள் அதிலும் குறிப்பாக கர்ப்பமுற்ற தாய்மார்கள், இளம் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டு அவர்களின் துயரம் தீர நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினர்கள் கட்சி வேறுபாட்டை கடந்து தங்களுக்குள் இணைந்து செயல்பட்டு தொண்டு செய்து வருகின்றனர். இதைப் போலவே பிற பிரச்சினைகளையும் உறுப்பினர்கள் கூட்டாக தீர்க்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
நாட்டின் அரசியல், பொருளாதார, கலாசார, சமூக வாழ்க்கையை அரித்துக் கொண்டிருக்கும் புற்று நோய்தான் ஊழல். அதை அகற்றியே தீர வேண்டும். அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை, சமூகம் ஆகிய அனைத்து அங்கங்களுமே இதை எப்படி களைவது என்று தீர்மானிக்க வேண்டும். அந்த நடவடிக்கையானது எளிதாக நிறைவேற்றக் கூடியதாக, தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும். ஊழல் நடக்காமல் தடுக்கவும், ஊழல் நடந்து விட்டால் அதை செய்பவர்களை கடுமையாக தண்டிக்கவும் வழிமுறைகள் அவசியம். இந்தியர்களின் சிந்தனை கூர்மையானது. நடுநிலையானது. மனிதாபிமானமுள்ளது என்று உலக அளவில் பாராட்டு பெற்றது. எந்தவகையிலும் தீவிரமான அணுகுமுறை கூடாது. நமது அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். நமது நிர்வாக மேம்பாடு அடைய வேண்டும். இந்த நாட்டின் அரசியல் சட்டம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகியவை தனித்தும் வலுவானதாக இயங்க முடிகிறது. சிறப்பான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்து தரப்பட்டுள்ளன. எந்த அமைப்பும் கையை மீறி போகாத வண்ணமும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தவும் சரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் சட்டம் ஏற்படுத்திய அமைப்புகள் அனைத்துமே நிலையானதாகவும், வலுவானதாகவும் செயல்பட்டு வருகின்றன.
நாம் நீதியின் பக்கமும், நல்ல நெறிகளின் பக்கமும்தான் நிற்கிறோம். நம்முள்ளே சகிப்பு தன்மையும் ஒற்றுமை உணர்வும் ஜனநாயக உணர்வும் மிகுந்திருப்பதால் முற்போக்கான பொறுப்புள்ள நாடாக திகழ்கிறோம். வளர்ச்சி பாதையில் அடிபோடும் போது நம்முடைய விழுமிய நெறிகளையும் அடையாளங்களையும் நாம் இழக்காமல் இருப்பது முக்கியம். இவ்வாறு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.