எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 18 - வனவிலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, நிவாரண நிதி ரூ.1 .5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- மக்கட்தொகைப் பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும் வன விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வன விலங்குகள் அடிக்கடி காடுகலை விட்டு வெளியேறி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால் நடைகள் இழப்பு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் வன விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துதல், அவை விரும்பி உண்ணும் பயிர்களை வனப் பகுதிகளில் வளர்ப்பது, வனங்களின் எல்லைப் பகுதிகளில் தடைகளை உருவாக்குவது, மனித உயிர்களுக்கும், விவசாயப் பயிர்களுக்கும், உடமைகளுக்கும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்கலை உள்ளடக்கிய செயல் திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமந் என்று, 4.8.2011 அன்று இந்த மாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-12-ம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. வன விலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்த் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி வன விலங்குகளால் மனிதர்களுக்கு உயிர் இழப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்படும் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 1.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், பயிர்ச் சேதம், உடமைகள் சேதம், கால்நடைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் வன விலங்குளால் ஏற்படும் பயிர்ச் சேத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை ஏக்கருக்கு 15,000 ரூபாய் என்ற அளவில் இருந்து, ஏக்கருக்கு 25,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படுவதுடன், சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கும், மரத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் இழப்பீடு வழங்கப்படும். வன விலங்குகளால், ஓட்டு வீடுகள், ஆர்சிசி வீடுகள், கூரை வீடுகள், எந்த அளவுக்கு சேதம் அடைந்தாலும், இதுவரை 5,000 ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது.
இந்தத் தொகை இனி, முழுவதும் சேதம் அடைந்த ஓட்டு வீடு ஆர்சிசி வீடுகளுக்கு 35,000 ரூபாயாகவும், கூரை வீடுகளுக்கு 10,000 ரூபாயாகவும் இனி உயர்த்தி வழங்கப்படும். பெருமளவில் பாதிப்புக்கு உள்ளான ஓட்டு வீடு ஆர்சிசி வீடுகளுக்கு 5,000 ரூபாயும், கூரை வீடுகளுக்கு 2,000 ரூபாயும், பகுதி சேமடைந்த வீடுகளுக்கு 1,500 ரூபாயும் இனி வழங்கப்படும்.
மேலும் வன விலங்குகளால் ஆடு, செம்மறியாடு, பன்றி போன்ற கால்நடைகள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை அனைத்துக்கும் 1000 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி, அந்தத் தொகை ஆட்டுக்கு 2,000 ரூபாய் என்ற அளவிலும், செம்மறி ஆட்டுக்கு 1,500 ரூபாய் என்ற அளவிலும், பன்றிக்கு 1,000 ரூபாய் என்ற அளவிலும் வழங்கப்படும். கோழி போன்ற ரீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்கள் இழப்பு ஏற்பட்டால், இதுவரை பறவைக்கு 30 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். வன விலங்குகளால் உடமைகளுக்கு இழப்பு ஏற்பட்டால், உண்மையான இழப்பின் அளவு அல்லது 100 ரூபாய் இவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை இழப்பீட்டுத் தொகையாக இதுவரை வழங்கப்பட்டது. இனி, வன விலங்குகளால் உடமைகள் இழப்பு ஏற்பட்டால், 2,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.