எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 20 - ஏ.எம் - பி.எம் பாராமல் உழைக்கும் எங்கள் சி.எம் நீங்கள் என்று சட்டசபையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசினார். சட்டபேரவையில் நேற்று உணவு கூட்டுறவு துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாத்ததில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசியதாவது:- தமிழகத்திற்கு வாழ்வளிக்கும் அவர்களது கனவை, அவர்களது ஆசையை, அவர்களது இலட்சியத்தை பிரதிபலிக்கும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு விடியல். தாயே நாள்தோறும் ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம். நீங்கள்தான். கட்சித்தொண்டனின் உழைப்பின் உண்மையறிந்து, அவனை கரம் தூக்கி, அரியணையில் உட்காரவைத்து, அழகு பார்ப்பது தங்களால் மட்டும்தான் முடியும்.
ஆம் ஏழை விவசாயி மகனாய், முகவை மண்ணில், கரிசல் காட்டில் பிறந்த என்னை முதலில் தங்கள் திருநாமத்தை தாங்கிய பேரவை மன்றத்தில் செயலாளராக விதையை விதைத்தீர்கள்.
2006 மாநகராட்சி தேர்தலின்போது என் மனைவிக்கு 153-வது வார்டில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தபோது, என் மீது பொய் வழக்குபோட்டு, சிறைச்சாலையில் அடைத்து கொடுமைகள் செய்த வேளச்சேரியில் குடியிருந்த மு.க.ஸ்டாலின். கழகத்தின் சீரிய எழிச்சியால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென் சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியை விட்டு அஞ்சி, நடுங்கி ஓடிப்போனார்.
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதையும், இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் மதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்திற்கு முதல் கட்டப் பணிகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வேளாண் விவசாயிகளின் வயலில் நீர் பாய்ச்சியது போல, வயிற்றில் பால் வார்த்தது போல, இதனால் சென்ற ஆண்டு வேளாண் உற்பத்தியான 85.35 லட்சம் மெட்ரிக் டன் என்பதைவிட இந்த ஆண்டு 115 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு தேசத்தின் முதுகெலும்பு கிராமத்திலுள்ளது என்று கனவு கண்டார் மகாத்மா காந்தி. அந்த காந்தியின் கனவை நினைவாக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உச்ச வேளாண் பருவத்தின் போது விவசாய வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டத்தை தீட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு மற்றுமொறு மனிமகுடமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதகமாக வெளியே எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா அது முற்றிலும் புதிது உலகிலேயே அரிது.
நாம் நடைமுறைப்படுத்துவதை பார்த்து பிளாஸ்டிக் கழிவுகளை நமது நாடுகளுக்கு அனுப்பும் அமெரிக்கா. ஜெர்மனி போன்ற நாடுகளும் அதை நடைமுறைப்படுத்த முன்வரலாம். முன்வர வேண்டும். அதேபோல திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை. எவரும் யோசித்திராத அறிவியல் திட்டம் இது. அதை நடைமுறைப்படுத்த ஹெலிகாப்டரில் இந்த சென்னை மாநகர் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஒரு சுற்று பார்வையிட்டு வந்திருக்கிறார்.
சென்னை மாநகர் சீரும் சிறப்பும் பெற நடவடிக்கை ஆரம்பித்துவிட்டார். முற்றிலும் புதிய ஓர் அணுகுமுறையை மேற்கொண்டு தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்கி வெற்றிப் பெறுறவது ஜெயலலிதாக்கே உள்ள தனித்தகுதி. முதல்வர்ஜெயலலிதா எடுத்த காரியம் யாவினும் வெற்றிதான்.
மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்கும் அளவுக்கு அத்திட்டம் இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா மக்களின் நாடித் துடிப்பை அறிந்த டாக்டர். பிறரைப்போல பல்கலைக்கழங்களை சும்மா நச்சரித்து டாக்டர் பட்டம் பெற்றவர் அல்ல. அவர் ஆக்கப்பூர்வமாக யோசிப்பவர். நடைமுறை எதார்த்தத்தை பார்கிறவர்கள். ஆகவே தான் மாணவ மாணவியருக்கு 4 செட் யூனிபார்ம் மற்றும் காலணிகள் என்று அறிவித்திருக்கிறார்.இந்த பட்ஜெட்டில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கி இந்த நலத்திட்டங்களும் சலுகைகளும் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்று கண்காணித்து செயல்படுத்துவதற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்று ஒரு துறையை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால் மட்டும் போதாது அது சம்மந்தமான ஆலோசனையையும் கருத்துக்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைக்கும், செயலுக்கும், ஆற்றலுக்கும், ஓர் எடுத்துக்காட்டாடு.
முதல்வரிடம் சில விண்ணப்பங்கள்:
வேளச்சேரி ஏரியை தூய்மைப்படுத்தி, படகு குழாயாக மாற்றி சுற்றுலா தலமாக அமைக்க வேண்டுகிறேன், போக்குவரத்து நெரிசலை போக்க திருவான்மியூர் எல்.பி.ரோடு சிக்னல் மற்றும் வேளச்சேரி - விஜயநகரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்து தருமாறு வேண்டுகிறேன், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறு, திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி பகுதி குடிசை வாழ் மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு கிரய பத்திரம் வழங்கப்பட்டாமல் உள்ளது. கிரய பத்திரம் உடனே கிடைக்க ஆவண செய்யுமாறு தங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி தொகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களுக்கு சொந்தமான தற்போது பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி திருக்கோவிலின் வருவாயை பெருக்கிட வழிவகை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்.
இஸ்லாமிய சகோதரர்களின் நெடுநாள் கோரிக்கையான அடக்கஸ்தலத்திற்கு வெயிலும், மழையிலும் சுமார் 15 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன செலவு சுமார் ரூ.5 ஆயிரத்தை தொடுகிறது. ஏழை, எளிய இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். ஆகையால் வேளச்சேரி தொகுதியிலேயே அவர்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.
தென் சென்னை மாவட்டத்திற்கென ஒரு அரசு பொது மருத்துவமனையை உருவாக்கி அதை வேளச்சேரி தொகுதியில் அமைக்க வேண்டுகிறேன். 2006 மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்கில் இதுவரை எந்த நடடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். வேளச்சேரி இரயில் நிலையம் அருகில் பேருந்து நிலையத்துடன் அடுக்ககாக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி புவனேஸ்வரி நகர் பகுதியில் வசிப்பவர்கள் கடந்த ஆட்சியில் போலி பத்திரப்பதிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனது சொந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால் இந்த பகுதிய மறு நில அளவை செய்து உரியவர்களுக்கு நிலம் கிடைக்க தக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.