எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும்.
9-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் அதிரடி வீரர் கெய்ல் இடம்பெறவில்லை. பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு இக்பாப் அப்துல்லா சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், குர்கீரத்சிங்குக்கு பதிலாக பெஹர்டைன், அனுரீத்சிங் ஆகியோர் இடம் பிடித்தனர்.
‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் எம்.விஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் கண்டனர். லோகேஷ் ராகுல் ஆட்டத்தில் அதிரடி மிளிர்ந்தது. 4-வது ஓவரில் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். 5.1 ஓவர்களில் பெங்களூரு அணி 50 ரன்னை எட்டியது.
அணியின் ஸ்கோர் 63 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய லோகேஷ் ராகுல் (42 ரன்கள், 25 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கரியப்பாவின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அதே ஓவரில் கேப்டன் விராட்கோலி (20 ரன்கள், 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய ஷேன் வாட்சன் (1 ரன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.
இதைத்தொடந்து சச்சின் பேபி, டிவில்லியர்சுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி வேகமாக ரன் சேர்த்தார். அபாரமாக ஆடிய டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கரியப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் கண்ட டிராவிஸ் ஹெட் (11 ரன்) கடைசி ஓவரில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் சச்சின் பேபி (33 ரன்கள், 29 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ரன்-அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா தலா 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய எஸ்.ஆர்.வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
பஞ்சாப் அணியில் ஹசிம் அம்லா 21 ரன்னிலும், விருத்திமான் சஹா 16 ரன்னிலும், டேவிட் மில்லர் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் எம்.விஜய் 89 ரன்னிலும் (57 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டோனிஸ் 34 ரன்னுடனும், பெஹெர்டைன் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், ஷேன் வாட்சன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்கள். 9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியால் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.
வெற்றி குறத்து விராட் கோலி கூறுகையில்...
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் இந்த வெற்றியை பெற்று 2 புள்ளிகளை பெற்று இருக்கிறோம். டிவில்லியர்ஸ், ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டான் தான் பாராட்டுக்குரியவர். கடைசி 2 பந்தை அவர் மிகவும் அபாரமாக வீசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். பஞ்சாப் அணி வீரர் முரளி விஜய் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அவர் மிகவும் அபாரமாக ஆடினார். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முரளிவிஜய் கூறியதாவது:-
இது கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பாக ஆட்டமாகும். ஆனால் நாங்கள் கடைசி வரை வெற்றிக்கு போராடினோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 175 ரன்னுக்குள் கட்டுபடுத்தி விட்டனர். நாங்கள் திட்டமிட்டு பேட்டிங் செய்தோம். ஸ்டோனிசை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அவரும் இறுதி வரை இருந்தார். ஆனால் வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெங்களூர் அணி 10-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை இன்றும், பஞ்சாப் அணி 11–வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 13-ம் தேதியும் சந்திக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.