எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்து 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் நகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கார்த்திகேயன், துணை மேயர் சத்தியபாமா மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 200 வார்டுகளாக உயர்த்தப்படுவது, 15 மண்டலங்களாக பிரிப்பது ற்றிய தீர்மானம் விவாதிக்கப்பட்டது.
சைதை ரவி (காங்கிரஸ்): பேசுகையில், `தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்றார். இதற்கு பதில் அளித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் அதிகமாக இருக்கும் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உறுப்பினர்களின் கருத்துக்கு இணங்க தொகுதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது பற்றி அரசுக்கு தீர்மானம் அனுப்பப்படும்' என்றார்.
கமிஷனர் கார்த்திகேயன் பேசும் போது, `3ல் ஒரு பங்கு பெண்கள் என்ற விகிதப்படி 67 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகள், இயற்கையான அமைப்புகளை வைத்து ஓரளவு நிர்வாக வசதிக்காக எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியும் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன' என்றார்.
மேயர் மா.சுப்பிரமணியன்: இது மட்டுமல்லாமல் நிர்வாக வசதிக்காக சென்னை மாநகரத்தை வடக்குப் பகுதி, மத்திய பகுதி, தென்பகுதி என்று 3 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் கூடுதல் கமிஷனர்களை நியமிக்கும் பரிந்துரையை கமிஷனர் அரசுக்கு அனுப்பியுள்ளார். இவ்வாறு மேயர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் கவுன்சிலர்கள் மங்கள்ராஜ், பிரபு, துரைராஜ் தேவகி உள்பட பலர் வார்டுகள் பிரிக்கப்பட்டதில் குறைகள் இருப்பதாகவும், அவசர அவசரமாக கூட்டத்தை நடத்தியதால் தீர்மானத்தை முழுமையாக படிக்க முடியவில்லை' என்று கூறினார்கள்.
அதற்கு பதில் அளித்த கமிஷனர், `பெரிய அளவில் குறைகள் இருந்தால் கடிதம் மூலம் கொடுங்கள்' சரி செய்யப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
விவாதம் முடிந்ததும் சென்னை மாநகராட்சி 9 நகராட்சி, 8 பேரூராட்சி, 25 ஊராட்சிகளுடன் இணைத்தும், 200 வார்டுகளாக உயர்த்தியும், 15 மண்டலங்களாக பிரித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்ற கூட்டம் முடிந்ததும் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏற்கனவே சென்னை 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னையாகவும், 155 வார்டுகள் கொண்ட சென்னையாகவும் இருந்தது. இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் போன்ற மாநகரின் பரப்பளவோடு ஒப்பிடும் போது சிறிய மாநகரமாக இருந்தது. இதை பெரிய மாநகரமாக உருவாக்கி மத்திய அரசின் நிதி உதவிகளை பெறுதல், மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காக மாநகராட்சியின் விரிவாக்க சட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது. இதன்படி 424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் சென்னை மாநகரம் விரிவுபடுத்தப்படுகிறது.
இதன்படி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சியில் திருவொற்றிர், அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம்புழுதிவாக்கம், மணலி, கத்திவாக்கம், ஆகிய 9 நகராட்சிகள், புழல், போரூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட 8 பேரூராட்சிகள், முகலிவாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், nullலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மடிப்பாக்கம், பாலவாக்கம், கடப்பாக்கம், சடையாங்குப்பம், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், மத்தூர், கதிர்வேடு, புத்தாகரம், சூரப்பட்டு, ராமாபுரம், காரம்பாக்கம், நெற்குன்றம், இடையஞ்சாவடி, நொளம்nullர், மணப்பாக்கம் உள்பட 25 ஊராட்சிகளும் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் அனைத்தும் 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள். தற்போது சென்னையில் 10 மண்டலங்கள் உள்ளன. இனி 15 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அவை திருவொற்றிர் (மண்டலம்1), மணலி (மண்டலம்2), மாதவரம் (மண்டலம்3), தண்டையார்பேட்டை (மண்டலம்4), ராயபுரம் (மண்டலம்5), திரு.வி.க. நகர் (மண்டலம்6), அம்பத்தூர் (மண்டலம்7), அண்ணா நகர் (மண்டலம்8), தேனாம்பேட்டை (மண்டலம்9), கோடம்பாக்கம் (மண்டலம்10), வளசரவாக்கம் (மண்டலம்11), ஆலந்தூர் (மண்டலம்12), அடையாறு (மண்டலம்13), பெருங்குடி (மண்டலம் 14), சோழிங்க நல்லூர் (மண்டலம்15).
மண்டலம்1ல் வார்டு எண்.1 முதல் 14 வரையும், மண்டலம் 2ல் 15 முதல் 21 வரையும், மண்டலம் 3ல் 22 முதல் 33 வரையும், மண்டலம் 4ல் 34 முதல் 48 வரையும், மண்டலம்5ல் 49 முதல் 63 வரையும், மண்டலம்6ல் 64 முதல் 78 வரையும், மண்டலம்7ல் 79 முதல் 93 வரையும், மண்டலம்8ல் 94 முதல் 108 வரையும், மண்டலம்9ல் 109 முதல் 126 வரையும், மண்டலம்10ல் 127 முதல் 142 வரையும், மண்டலம்11ல் 143 முதல் 155 வரையும், மண்டலம் 12ல் 156 முதல் 169 வரையும், மண்டலம் 13ல் 170 முதல் 182 வரையும், மண்டலம் 14ல் 183 முதல் 191 வரையும், மண்டலம் 15ல் 192 முதல் 200 வரையும் வார்டுகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகரம் முழுவதும் வார்டு வாரியாக வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 1385 வாக்குச்சாவடிகளும், பொது வாக்காளர்களுக்கு 2111 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 4881 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
116 பொது வார்டுகள், 58 பெண்களுக்கான வார்டுகள், 9 ஆதிதிராவிட பெண்களுக்கான வார்டுகள், 17 ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.
மையிலாப்nullர், ராயபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் ஆண்களுக்கு போட்டியிட வாய்ப்பில்லை என்று எதிர்க் கட்சி தலைவர், ஆளுங்கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் முறையிட்டனர். எனவே தொகுதி வாரியாக பெண்களுக்கு 33.3 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்க வேண்டும் என கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.