எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.- 27 - தமிழக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுமுதல் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. சென்னை மேயர் வேட்பாளர்கள் சைதை துரைச்சாமி. மதுரை மேயர் ராஜன் செல்லப்பா தூத்துக்குடி மேயர் சசிகலாபுஷ்பா, திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. அக்டோபர் 17ல் நடை பெறும் முதல்கட்ட தேர்தலில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்nullர், வேலூர் ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதே நாளில் 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. 2வது கட்ட தேர்தல் நடைபெறும் 19ந்தேதி 65 நகராட்சிகள், 270 பேரூராட்சி கள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகள் உள்ளன. உள்ளாட்சி பதவிகளில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் கடந்த 22ந்தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் 10 கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. எனவே லட்சக் கணக்கில் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். ஆனால் கடந்த சனிக்கிழமை வரை 25 ஆயிரத்து 723 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம் ஞாயிறு விடுமுறை தினமாகும் . வருகின்ற 29ந்தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யலாம். வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. பா.ஜனதாவும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. க ாங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மற்ற கட்சிகளின் விடுபட்ட பட்டியலும் வளியாகும் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் வரை மந்தமாக இருந்த மனுதாக்கல் நேற்று சூடு பிடித்துவிட்டது. நேற்று அமாவாசை நல்லநாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சி வேட்பாளர்களும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எனவே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்வோரின் கூட்டம் அலைமோதியது. பகல் 11 மணி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன என்றாலும் 12 மணிக்கு பிறகே நல்லநேரம் என்பதால் பெரும்பாலானோர் மனுதாக்கல் செய்தனர். மாலை 3 மணி வரை ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு மனுக்களை தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி மாநகராட்சிக்கு வந்து தேர்தல் அதிகாரியும், கமிஷனருமான கார்த்திகேயனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் செந்தமிழன், பாலகங்கா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலைராஜன், வெற்றிவேல், வளர்மதி, மாதவரம் மூர்த்தி, ராஜலட்சுமி, தொழிற்சங்க செயலாளர் அர்ஜுனன், கடும்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிககள் ஆகியோர் திரண்டு வந்திருந்தனர். மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று மதியம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயக்குமார், மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க. மேயர்வேட்பாளர் சசிகலாபுஷ்பா, தேர்தல் அலுவலரும் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனருமான தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் மனுதாக்கல் செய்தார். திருப்nullர் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் விசாலாட்சி மாநராட்சி கமிஷனர் ஜெயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அமுதா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் சண்முகவேலு, சிவசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆனந்தன், பரமசிவம் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
குளச்சல் நகரசபை அ.தி.மு.க. வேட்பாளர் பெலிக்ஸ் ராஜன் நேற்று அமைச்சர் பச்சைமால் முன்னிலையில் குளச்சல் நகராட்சி அலுவலத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இன்றும் மகாளய அமாவாசை எனவே அதிகமானோர் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29ந் தேதியுடன் மனுதாக்கல் முடிந்து 30ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அன்று மாலையே ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுவோர் எத்தனை பேர், யார் யார் என்ற விவரம் தெரிந்து விடும். மனுக்களை வாபஸ் பெற 3ந்தேதி கடைசிநாள். அன்று வேட்பாளர்கள் பெயர் விவரம் அவர்களுடைய சின்னங்கள் ஆகியவை அறிவிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.