எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி சூரமங்கலத்தில் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர்கள் விடுதி திறப்பு விழா மற்றும் சார்நிலை கருவூல கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இவ்விழா கலெக்டர்வா.சம்பத்,இ.ஆ.ப., தலைமையும், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசியதாவது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் இன்றை தினம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, போடிநாயக்கன்பட்டியில் தமிழக அரசின் மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதிக்கு புதிய விடுதி கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.1.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் விடுதிக் கட்டடம் கட்டும் பணியானது முடிக்கப்பட்டு, இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் நல்லமுறையில் படித்து, மேலும் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக அனைத்து வசதிகளுடன் இவ்விடுதி கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து சூரமங்கலம் பகுதியில் ரூ.66.55 லட்சம் மதிப்பிலான சார்நிலை கருவூல கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சார்நிலை கருவூல கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டங்கள் மூலம் பள்ளி மணவ, மாணவியர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, பாடபுத்தகம், திறமை வாய்ந்த ஆசிரியர்கள், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்க ஏதுவாக ஏற்படுத்தியதன் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப்பள்ளியில் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உருவாக்கியதன் காரணத்தால் அரசு பொதுத்தேர்வுகளில் சேலம் மாவட்ட மாணவ, மாணவியர்கள் தமிழக அளவில் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு சேலம் மாவட்டத்திற்கென ரூ.340 கோடி மதிப்பில் நடைபெறும் உயர்மட்ட பாலப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஏ.வி.ஆர் ரவுண்டானா, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதியில் மிகப்பெரிய பாலம் மற்றும் ஸ்டில் பிளான்ட் பகுதிகளில் 145 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், செவ்வாய்பேட்டை பகுதியில் உயர்மட்ட பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் என சேலம் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் எளிதாக பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பேசினார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (க,ப) மு.சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் சி.விஜய்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நெ.செல்வம், உதவி செயற்பொறியாளர் செந்தாமரை, வட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி