எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டுள்ளதையொட்டி அங்கு பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. அம்மா என்ற ஒரு பெயரிலும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா என்ற மற்றொரு பெயரிலும் இரு அணிகள் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பாக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. சார்பாக மருது கணேஷ், தே.மு.தி.க. சார்பாக மதிவாணனும், மக்கள் நல கூட்டணி சார்பாக ஒற்றுமை இல்லாததால் இடது கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மட்டும் லோகநாதனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஜெ.தீபா பேரவை சார்பாக தீபாவும் பாரதிய ஜனதா சார்பாக கங்கை அமரனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை சார்பாகவும் போட்டியிடுகிறார்கள்.
வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி
ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலும் வேட்புமனு பரிசீலனையும் முடிந்துவிட்டது. மொத்தம் 82 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனு வாபஸ் வாங்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணிக்கு களத்தில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். போட்டியிடும் வேட்பாளர்கள் 64 பேருக்கும் மேலாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறைதான் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த முடியும். 64 வேட்பாளர்களுக்கும் குறைவாக இருந்தால் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு பயன்படுத்தப்படும்பட்சத்தில் தாம் வாக்களித்த வாக்கு விரும்பிய வேட்பாளருக்கு கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குப்பதிவு சீட்டு வழங்க இந்த தேர்தலில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு மற்றும் திரித்தம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாரையொட்டி இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
தலைவர்கள் முற்றுகை
இந்தநிலையில் ஆர்.கே. நகரில் அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிடத்தொடங்கிவிட்டனர். இதனையொட்டி பிரசாரம் களை கட்டத்தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க., இடது கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., பாரதிய ஜனதா,ஜெ.தீபா பேரவை ஆகிய கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிலும் அ.தி.மு.க. அம்மா, அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா, தி.மு.க. ஆகிய கட்சிகளுடையே மிகக்கடுமையான போட்டி நிலவிகிறது.
வீடு வீடாக பிரச்சாரம்
ஆர்.கே. நகரில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தெருத்தெருவாக பிரசாரம் செய்வதோடு வீடு வீடாகவும் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்.கே. நகர் தொகுதியில் குவிந்தவண்ணம் வருகிறார்கள். இதனால் தொகுதியில் பிரசாரம் களைகட்டத்தொடங்கியுள்ளது.
தினகரன்:-
அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக டி.டி.வி. தினகரன் கடந்த 23-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்துவிட்டார். அவரது வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்தவுடனேயே அவர் வீதி, வீதியாக பிரசாரம் செய்யத்தொடங்கிவிட்டார். அதோடுமட்டுமல்லாது அவர் சார்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் பிரசார பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டதோடு அவர்கள் குழுக்களாக பிரிந்து அவருக்கு பிரசாரத்திற்கான உதவிகளை செய்து வருவதோடு அவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொகுதி முழுக்க இவர்கள்தான் பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.
மதுசூதனன்:-
அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா சார்பாக போட்டியிடும் மதுசூதனன் ஆதரவாளர்களும் பிரசாரத்தை நேற்று தொடங்கிவிட்டனர். வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பிரசார பணிமனைக்கான பூமிபூஜையை ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார். தண்டையார் பேட்டையில் உள்ள நாடரான் தோட்டத்தில் முதல் தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்தினர். இதில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, ம.பா.பாண்டியராஜன் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். ஏற்கனவே தொகுதி முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை மதுசூதனன் சந்தித்து பேசி தனக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இன்று முதல் அவர் தனது அணியின் மூத்த தலைவர்களுடன் தெரு தெருவாகச் சென்று பிரசாரம் செய்கிறார். மதுசூதனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
மருதுகணேஷ்:
தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மருதுகணேஷ் அந்த தொகுதியை சேர்ந்தவராக இருப்பதால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனே தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தொகுதியில் உள்ள முக்கிய பெரியோர்களை சந்தித்து அவர்களிடம் ஆசிபெற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களும் நாளை முதல் தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்ய தயாராகி வருகிறார்கள். நாளை தி.மு.க. வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மருதுகணேஷை அறிமுகம் செய்துவைத்து பேசுகிறார். அந்த கூட்டத்தில் தி.மு.க.வின் இதர தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் சுப.வீரபாண்டியன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், எஸ்றா சற்குணம், செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், பார்வர்டு பிளாக் அம்மாவாசி, கதிரவன், அதியமான் ஆகியோரும் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள்.
கங்கை அமரன்:
பாரதிய ஜனதா சார்பாக போட்டியிடும் கங்கை அமரன் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை செளந்தராசன் பிரசாரம் செய்து வருகிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு ஆதரவாக பா.ஜ.கட்சியின் இதர தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இடதுகம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனுக்கு ஆதரவாக அந்தக்கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நாம் தமிழர், தே.மு.தி.க. கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீபா:
ஜெ.தீபா பேரவை சார்பாக போட்டியிடும் தீபா தனது பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இன்றுமாலை தண்டையார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தெருவில் இருந்து தீபா பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசுகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், ஆதரவாளர்களும் குவிந்து வருவதால் பிரசாரம் களைகட்டத்தொடங்கிவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.