எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்கோட் : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கெய்ல், விராட் கோலி ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் இந்த சீசனில் 2-வது வெற்றியை பெற்றது.
8 அணிகள்
8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
20-வது லீக் ஆட்டம்
இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் லயன்சும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் மீண்டும் முதுகுவலியால் அவதிப்படும் டிவில்லியர்ஸ் மற்றும் பத்ரீ நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் கெய்ல், டிராவிஸ் ஹெட் திரும்பினர். குஜராத் அணியில் மூன்று மாற்றமாக ஜாசன் ராய், முனாப் பட்டேல், பிரவீன்குமார் ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டனர்.
கெய்ல் அதிரடி
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் களம் இறங்கினர். தவால் குல்கர்னியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து கேப்டன் விராட் கோலி அதிரடிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டார்.
சிக்சர் மழை
அதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்லின் பேட், ராக்கெட் வேகத்தில் சுழல ஆரம்பித்தது. முந்தைய தடுமாற்றத்திற்கு ஒட்டுமொத்தமாக விடைகொடுத்த அவர் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை கதறடித்த அவர் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விசுவரூபம் எடுத்த கெய்ல், சிக்சருடன் நடப்பு தொடரில் முதல் அரைசதத்தை கடந்தார்.
முதலில் ஆக்ரோஷமாக ஆடிய விராட் கோலி, அதன் பிறகு கெய்லுக்கு வாய்ப்பு அளித்து விட்டு எதிர்முனையில் நின்று ரசிக்க தொடங்கி விட்டார். வெய்ன் சுமித்தின் ஓவரிலும் கெய்ல் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார்.
கோலி அரை சதம்
குஜராத் பந்து வீச்சாளர்களை வெளுத்து கட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 122 ரன்களை (12.4 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. கெய்ல் 77 ரன்களில் (38 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) பாசில் தம்பியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். இதன் பின்னர் தனது 28-வது ஐ.பி.எல். அரைசதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி 64 ரன்களில் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டும், கேதர் ஜாதவும் கைகோர்த்து தொடக்க ஜோடி விட்டுக்சென்ற பணியை செவ்வனே செய்து முடித்தனர். இவர்களும் வாணவேடிக்கை காட்ட தவறவில்லை. அதன் மூலம் அணி 200 ரன்களை சுலபமாக கடந்தது.
213 ரன் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 30 ரன்களுடனும் (16 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 38 ரன்களுடனும் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த சீசனில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இது தான்.
பின்னர் ஆடிய குஜராத் அணியும், பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்வேட்டைக்கு குறை வைக்கவில்லை. ஒரு பக்கம் வெய்ன் சுமித் (1 ரன்), கேப்டன் சுரேஷ் ரெய்னா (23 ரன்), ஆரோன் பிஞ்ச் (19 ரன்), தினேஷ் கார்த்திக் (1 ரன்) ஆகியோர் வரிசையாக வெளியேறினாலும், மறுபுறம் பிரன்டன் மெக்கல்லம், பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஆனால் மெக்கல்லம் (72 ரன், 44 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) வீழ்ந்ததும் குஜராத்தின் நம்பிக்கை தகர்ந்து போனது.
பெங்களூரு வெற்றி
இறுதி கட்டத்தில் இஷான் கிஷன் (39 ரன், 16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) போராடிய போதிலும் அது ரன் வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியால் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். குஜராத்துக்கு விழுந்த 4-வது அடியாகும்.
இலக்கு கடினமானதே: ரெய்னா
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி தோல்வியில் இருந்து மீண்டு குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ராஜ்கோட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 77 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோலி 50 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேதர் ஜாதவ் 16 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து கோலி ...
மெக்கல்லம் 44 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), இஷாந் கிசான் 16 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரெய்னா 8 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சஹால் 3 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கிறிஸ் கெய்ல் அபாரமாக விளையாடினார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட 30 ரன்கள் அதிகமாகவே எடுத்துவிட்டோம். பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வெற்றி நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து ரெய்னா ...
குஜராத் லயன்ஸ் அணி 4-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரெய்னா கூறியதாவது:-
நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம். 200 ரன் என்பது எடுக்க கூடிய இலக்கு தான். 200 ரன்னுக்கு மேல் இலக்கு என்பது கடினமாதே. எங்களது பவுலர்கள் கூடுதலாக ரன்களை கொடுத்து விட்டனர். பந்துவீச்சு குறித்து மிகுந்த கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 23-ம் தேதியும், குஜராத் அணி நாளை கொல்கத்தாவையும் சந்திக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,