முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.,ஆர்.எஸ்.எஸ். விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்- திக்விஜய்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அக்.- 30 - பாரதிய ஜனதா, ஆர். ஆர்.எஸ். விஷயத்தில் ஆன்மீக தலைவர் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் கவனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் ரவி சங்கர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஏஜண்டு என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் அண்ணா ஹசாரே குழுவை திக்விஜய் சிங் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதோடுமட்டுமல்லாது அண்ணா ஹசாரே அரசியல் சார்ந்து செயல்படுகிறார் என்றும் அவருக்கு பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துமத இயக்கங்களும் ஆதரவு அளித்து வருகிறது என்றும் திக்விஜய்சிங் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஏஜண்டாக ஆன்மீக தலைவர் ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் செயல்பட்டு வருகிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ள திக்விஜய்சிங், அண்ணா ஹசாரேயையும் மீண்டும் தாக்கியுள்ளார். அண்ணாஹசாரே குழுவுக்கு மறைமுகமாக இருந்துகொண்டு ஆதரவு அளித்து வரும் கே.என்.கோவிந்தாச்சாரியா,அஜித் தோபல்,எஸ்.குருமூர்த்த போன்றவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஹசாரேவை திக்விஜய்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி எழுதிய புத்தகத்தை அவருடன் ஒரு மேடையில் அமர்ந்து வெளியிட்டவர்தான் ஸ்ரீ.ஸ்ரீ.ரவி சங்கர். ரவி சங்கர் பெரும் மதிப்புக்குரியவர். மக்களை பக்குவப்படுத்தி வாழ்க்கை முறையை செம்மையாக வைத்துக்கொள்வதில் பெரும் தொண்டாற்றியவர். அதனால் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தின் வலையில் சிக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்றும் அவரை திக்விஜய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்