எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி தலைமையேற்று, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.கோபால் முன்னிலை வகித்தார்.
மின்னணு அட்டை
இவ்விழாவில் உணவுத்துறை அமைச்சர் பேசியதாவது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 392 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை,திருமண உதவித்தொகை, வேளாண்மைதுறை சார்பாக மழைத்தூவான், சலவைப்பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலக பயன்பாட்டிற்கு கணினி மற்றும் அச்சுப்பொறி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் ரூ.3 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 சதவீதம் அளவிற்கு தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
மத்திய தொகுப்பில் விலைக்கொடுத்து வாங்கி விலையி;ல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 2005 ஆண்டு முதலமைச்சராக இருந்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா புதிய குடும்ப அட்டையை வழங்கினார்கள். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசால் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தை தொடங்கிய போது தமிழக அரசு ஆதார் எண்ணையும் கணக்கெடுப்போடு இணைத்து ரூ.330 கோடி மதிப்பில் மின்னணு குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்கள். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திருவள்ளுர் மாவட்டத்தில் இத்;திட்டம் தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மின்னணு குடும்ப அட்டைகள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு செயல்படுத்தி உணவு பாதுகாப்புத்திட்டத்தில் 1 நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் 1 நபர் உள்ள குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.5 பேர் ஒரு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 25 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான உணவுபாதுகாப்புத்திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வலங்கைமானில் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 150 நபர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசு புரட்சி தலைவி அம்மா எண்ணிய திட்டங்களை தம்pழக மக்களுக்காக நிறைவேற்றி வருகிறது என உணவுத்துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ், துணை கலெக்டர் சமூகபாதுகாப்புத்திட்டம் விஜயலெட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம், அவளிவநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்,வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.