எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையையும், அதன் பாதுகாப்பையும் நிரூபிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
முறைகேடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என்று கூறி வந்தார். தற்போது உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்கு பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டினார். அதோடுமட்டும் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்தார். இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் புகார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரசும் கூறிவருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோதிலும் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் சேர்ந்து புகார் செய்தன. இப்படி புகார் அடிக்கடி கூறப்பட்டு வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவித தில்லுமுல்லுக்கும் இடமிமல்லை என்பதையும் அது நம்பகத்தனமானது என்பதை நிரூபிக்கவும் சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
உறுதி சீட்டு
தேர்தல் முறையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு தாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கு போய் சேர்ந்துள்ளதா என்பதை அறியவும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கச்செய்யவும் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அவர்களுக்கு உறுதி சீட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வெளிவரும்படி செய்யப்படும் என்று நசீம் ஜைதி நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
நிரூபிக்கப்படும்
இதற்காக சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும். கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் சாதகமாக இருக்கும்படி செய்ய முடியாது என்பதையும் தொழில்நுட்பம் ரீதியாக வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் நிரூபிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் புகார் கூறியிருப்பதையும் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதையும் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த நசீம் ஜைதி மேற்கண்டவாறு கூறினார்.
15 லட்சம் இயந்திரங்கள்
எதிர்க்கட்சிகளின் இந்த புகாரை தேர்தல் கமிஷன் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மின்னணு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்கும் நேரம் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செயல்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து யாராவது சந்தேகம் எழுப்பினாலோ, புகார் கூறினாலோ, அதை மறுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்க தயார் என்று வெளிப்படையாகவே சவால் விட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. நாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கே போய் சேர்ந்துள்ளது என்பதை வாக்களித்தவர்கள் அறிந்துகொள்ளும்படி அடையாள சீட்டு வெளியே வரும்படி செய்யும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் கமிஷன் ஆர்டர் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சுமார் 15 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட், எல்க்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்துள்ளோம்.
முதல் நாடாக ...
இதற்கான நிதியையும் பெற்றுள்ளோம். வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த இயந்திரங்கள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் நடக்கவிருக்கும் அனைத்து தேர்தல்களின் இந்தவகையான இயந்திரங்களைத்தான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்திலேயே இந்தியாதான் முதன் முதலாக அனைத்து தேர்தல்களில் [விவிபிஎடி] வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் முதல்நாடாக இருக்கலாம். இதன் மூலம் தேர்தல் முறையானது வெளிப்படையாகவும் மக்களிடத்தில் நம்பிக்கையை ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.