எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 83 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முதலாக மேட்டூர் அணையில் தூர் வாரும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதன் மூலம் 1 லட்சம் கன மீட்டர் வண்டல் மண்ணை பயன்படுத்த விவசாயிகள் இலவசமாக ஏற்றிச்சென்றனர்.
தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதியநீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இச்சூழ்நிலையை பயன்படுத்தி,நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில்விவசாயப் பணிகளை மேம்படுத்திட, பயனீட்டாளர்களின் உதவியுடன் பண்டையகுடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்து, ரூபாய் 100 கோடி செலவில் 30 மாவட்டங்களில் 1519 பணிகளை செயல்படுத்திடும் விதமாக, முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமியால் காஞ்சிபுரம்மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகள்தொடங்கி வைக்கப்பட்டு, ஒரு மக்கள் இயக்கமாக மாநிலம் முழுவதும் இத்திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.300 கோடி
மேலும், 2017-18ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு 2065 பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ளநீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல்மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை
தமிழக அரசு ஆணை:
மீளப் பெறும் சீரிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி,கால்வாய் மற்றும் நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தூர்வாரும்போது எடுக்கப்படும்வண்டல்மண் மற்றும் களிமண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும்பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமின்றி மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதிபெற்று எடுத்து செல்ல அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் 27.ம்தேதி அரசாணைவெளியிடப்பட்டது.
கட்டணம் இல்லை
அதன்படி, விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளிலிருந்துவண்டல்மண் எடுத்துச்செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக கூடுதலாக60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் தங்கள் சொந்தபயன்பாட்டிற்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் ஆகியவற்றை கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலத்திலுள்ள மொத்தம் 42,115 நீர்நிலைகளில் 36,345 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 9,986 நீர்நிலைகளிலிருந்து 44,10,472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. 86,355 விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பயனீட்டாளர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர்.
முதல் முறையாக
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரியாற்றின் குறுக்கே1925-ஆம் ஆண்டு தொடங்கி 1934-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தமிழகத்தின்மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாநிலமெங்கும் செயல்படுத்தப்பட்டுவரும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின்படி மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை செயல்படுத்தும் விதமாக, மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலதுகரைப்பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும்,மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண்ணில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழ்நாடு அரசால் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை முதலமைச்சர் .எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்கள். இதன்மூலம் மேட்டூர் அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்திற்கு தேவையான நீர்வளமும் அதிகரிக்கும்.
அமைச்சர்கள்- அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் . பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர்.கே.பி.அன்பழகன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைஅமைச்சர் டாக்டர் வி. சரோஜா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறைமுதன்மைச் செயலாளர். சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச்செயலாளர் எஸ்.கே. பிரபாகர், முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாகஆணையர் முனைவர் கொ. சத்யகோபால் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்வி. சம்பத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.