எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை- மதுரை பாண்டியன் ஹோட்டலில், பொது விநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆர்.காமராஜ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர்.கே.ராஜு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
பொதுவிநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் தொடர்பான முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் நிறைவுற்ற நிலையில் இன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கி தமிழ்நாட்டின் வருவாயில் 48 சதவீதத்தில் சமூகநலப்பணிக்காக ஒதுக்கி பல திட்டங்களை தீட்டியுள்ளார் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா.
போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் 37 நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் 26500 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர், ராவணபுரம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருச்சிக்குட்பட்ட சிறுபலமலையில் வாழும் 48 குடும்பங்களுக்காக மாதம் இரு முறையும், பெருபலமலையில் வாழும் 19 குடும்பங்களுக்காக மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
..
உணவுக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 979 நபர்கள் தடுப்புகாவல் தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடுஅரசு ஏழை, எளிய மக்களுக்காக வேறு எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவிற்கு மலிவான விலையில் துவரம்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மேலும் புளி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தும் பொருட்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
பண்ணைப்பசுமை காய்கறி திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை பெற்று பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 25 கம்பெனிகள் புதிதாக தொழில் துவங்க அனுமதி வழங்கியதன் மூலம் 65000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் உன்னதமான திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் முழுப்பயன்களும் உரியவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் ரூ.330 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
இதன்படி, 01.04.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகள் வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 75 ஆயிரத்து 778 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 38 இலட்சத்து 2 ஆயிரத்து 770 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் முழுவதுமாகவும், 50 இலட்சத்து 85 ஆயிரத்து 431 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் இணைத்துள்ள ஆதார் விபரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்தலின் போது ஏற்படும் தவறுகளால் மின்னணு அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக தாலுகா அளவில் ஒரு குழு அமைத்து இக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின் கைப்பேசி செயலி (ஆழடிடைந யுpp)இ பொதுமக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் , வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டம் ஒரு முன்னோடியான திட்டம் ஆகும். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் தற்பொழுது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது பொதுவிநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க மறைந்த நமது தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவிட்டார்கள்.
மின்னணு குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளை கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தங்கு தடையின்றி வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
பின்னர் நடந்த பயிற்சி வகுப்பில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பொது விநியோகத்திட்ட கணினிமயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வnpனள ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி, மின்னணு அட்டைகள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர்பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மைச் செயலாளர் , நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்ஏ.ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்),பி.நீதிபதி (உசிலம்பட்டி),பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையாளர் கே.பிரியா, மற்றும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.