எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“மகனே! உன் அறிவை என்னென்பேன்! பெரியோர்கள் தேடிய உணவை உண்ணுதல் சிறந்த மகனுக்கு அழகாகாது என்று எண்ணுகின்றாயா? இவ்வளவு இளம் பருவத்திலேயே உனக்கு இத்தகைய அறிவா? நான் உயிரோடிருக்கும் வரை நீ உழைக்க வேண்டாம். நான் இறந்த பிறகு வேண்டுமானால் உன் விருப்பம் போல் செய். அதுவரை என் பாதுகாப்பிலேயே நீ வளர்ந்து வருவாயாக!” என்று ஆஞ்சநேயன் தாய் அஞ்சனை கூறினாள்.
இது கேட்ட மாருதி மிகப் பணிவுடன் தன் தாயிடம் கூறினான்; “அம்மா!‘தாய்சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பதை நான் அறிவேன். தங்களை எதிர்த்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம்! என்னைப் பெற்றெடுத்த தெய்வமே! தங்கள் மணிவயிற்றில் என்னைப் பலகால் சுமந்தீர்கள். பெறுதற்குரிய துன்பமுடன் என்னைப் பெற்றெடுத்தீர்கள். ஈயெறும்பு முதலியன என் மீது மொய்க்காமல் இரவு பகலாகப் பாதுகாத்தீர்கள்! நான் நோயால் வருந்தினால், எனக்காகத் தாங்கள் மருந்து உண்டீர்கள். சிறந்த காய்கனிகள் கிடைத்தால், அதைத் தாங்கள் உண்ணாமல் எனக்கே கொண்டு வந்து கொடுத்தீர்கள். இவ்வாறு என்னை அன்புடன் வளர்த்த தங்களுக்கு எத்தனைப் பிறவி எடுத்தால் கைம்மாறு செய்ய முடியும்? இனியும் நான் தங்களிடம் கடன்பட வேண்டுமா? தங்களுக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்புத் தாருங்கள், தாயே!” என்று உள்ளம் உருகி வேண்டினான். இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அஞ்சனையின் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகியது. இப்படிப்பட்ட நன்மகனைப் பெற்றதை எண்ணி இறும்பூதெய்தினாள். குழந்தையைத் தழுவி அணைத்தாள்; உச்சி மோந்தாள்; ஆனந்தக் கண்ணீர் பெருகச் சில சொற்களைச் சொல்லலானாள்:
“மகனே! நான் உன்னைப் பெற்றதனால் பெரும் பாக்கியவதி ஆகிவிட்டேனடா! புல மக்களை நான் பெற்று மகிழ்வதைவிட, உன் ஒருவனால் மட்டுமே என்னால் பேரின்பம் எய்த முடியும். என் பிள்ளைச் செல்வமே! பிறவிதோறும் நீயே மகனாக வரவேண்டும் என்று இறைவனை நான் வேண்டிக்கொள்ளப் போகிறேன்,’ என்று அஞ்சனை தன் மகனைப் பாராட்டினாள். மேலும் கூறலானாள்:
கண்ணே! உன் எண்ணம் போலவே இனி உழைத்துச் சாப்பிடுவாயாக! இந்த மலைச்சாரலில் காணும் மரஞ்செடி கொடிகளைப் பார்! இவற்றில் கிடைக்கும் சிறந்த காய்களையும், கனிகளையும், நாம் உணவாகக் கொள்ளலாம். எதிரே தோன்றும் காடுகளையும், மலையுச்சிகளையும் பார்! அங்கெல்லாம் செல்லாதே! அவை துன்பந் தரும் வழிகளையுடையவை. உயர்ந்த மரங்களில் ஏறாதே! மலைச்சாரலை விட்டு மலையுச்சிக்குச் செல்லாதே! சிகரங்கள் உயரமானவை. அவற்றின் மேல் ஏறிக் கைகால்களை உடைத்துக்கொள்ளாதே! நான் செல்லும் இடங்கள் தோறும் என்னுடனே சில நாள் வந்து பார்! நான் எவற்றை உண்கின்றேனோ அவற்றையெல்லாம் நன்றாகக் கவனித்து வா! காய், கனி, கிழங்குகளில் நல்லனவும் உள் தீயனவும் உள. தேர்ந்து உண்ணல் வேண்டும். ஆராயாது உண்டால் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தாலும் முடியும்,” என்று உண்ணற்குரிய பொருள்களையும், பெற வேண்டிய இடத்தினையும், தேர்ந்து கொள்ள வேண்டிய முறையினையும் நன்கு விளக்கினாள், அஞ்சனை. இவ்வாறு, சில நாட்கள் அஞ்சனையின் சொற்கேட்டு அதன்படி மாருதியும் அன்னையுடன் வாழ்ந்து வரலானான். ஒருநாள், தன் தாயைப் பிரிந்து மாருதி மட்டும் தனித்துச் சோலையுள் புகுந்தான். அப்பொழுது, அஞ்சனை உறங்கிக் கொண்டிருந்தாள். மாருதி சோலையினை ஒரு வலம் வந்தான். பின்னர் திடீரெனக் கிழக்கே நோக்கினான். கீழ்வானில் தகதகவெனும் சூரியனைக் கண்டான். அதனையும் ஒரு கனியெனவே தன் மனத்துட்கொண்டான். அதனைப் பறித்துண்ணக் கருதி அதனை நோக்கிப் பாயலானான்.
இவன் பாய்ந்த வேகத்தில் சோலைகளில் இருந்த மரஞ்செடி, கொடிகளும், மலைகளும,; திசைகளும் சுழன்றன. இவன் ஆற்றல் கண்டு தேவர் மூவரும் கூடத் திகைத்து நின்றனர்.
மாருதி சென்று கொண்டே இருந்தான். சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதி செல்லுவதை இராகு என்னும் கோள் கண்டுவிட்டான். “சூரியனைப் பற்றும் உரிமை எனக்கு மட்டுமே இதுவரை இருந்து வந்துள்ளது. எனக்குப் போட்டியாக யாரோ ஒருவன் அச்சமின்றிப் பகலவனை நோக்கிச் செல்கின்றானே! சூரியனும் அவனைக் காய்ந்து கொல்லவில்லையே! குளிர்ந்த கிரணங்களையன்றோ அவன் மேல் வீசுகின்றான்! இது என்ன விந்தை!” என்று எண்ணியவனாய்த் தன் குறையைத் தேவர் தலைவனாகிய இந்திரனிடம் எடுத்துக் கூறினான். “ நீ போய்ச் சூரியனை விரைவில் பற்றிக்கொள். நான் தொடர்ந்து வந்து நடக்க வேண்டியவற்றைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று இராகுவுக்குக் கூறி அனுப்பினான் இந்திரன். இதற்குள், மாருதி சூரிய மண்டலத்தை நெருங்கலானான். மாருதியையும் விஞ்சி இராகு விரைந்து பறந்தான். மாருதி இராகுவைக் கண்டுவிட்டான். சூரியன் மேல் பாய்வதை விட்டு, மாருதி இராகுவின் மேல் பாயலானான். பயந்து நடுங்கிப் போன இராகு, இந்திரனிடமே சென்று சேரலானான். இராகு பயந்து வருதலைக் கண்ட இந்திரன், மாருதி மேல் சினம் கொண்டான். மாருதியை மாய்த்து வருமாறு வெள்ளை யானையை ஏவினான். வெள்ளை யானையையும் ஒரு கனியெனவே கருதினான் மாருதி. குழந்தைகட்குத் தேள்கூட உணவுப் பொருளாகத் தோன்றுதல் இயற்கைதானே!
வெள்ளை யானையைப் பற்றக் கருதி அதன் மேல் மாருதி பாய்தலைக் கண்டு தேவர்கோன் வெகுண்டான். தன் கையிலிருந்த வச்சிரப் படையை எடுத்தான். ஆஞ்சநேயனை நோக்கி வீசினான். குலிசம் என்னும் வச்சிரப்படை தாக்கியதால் மாருதி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தான். தன் மகன் தரை மேல் வந்து விழுந்ததை வாயுபகவான் கண்டான். உணர்விழந்த தன் மகன் நிலைகண்டு உள்ளம் வெதும்பினான். பெற்ற வயிறு பற்றி எரிந்தது. தன் மைந்தன் நிலையைக் காணச் சகியாதவனாய்க் கண்ணீர் விட்டுப் புலம்பினான். குழந்தைப் பாசத்தைக் கடவுளாலும் கடக்க முடியாது என்பது எவ்வளவு உண்மை! வாயுதேவன் தன் மகனைத் தோள்மேல் போட்டுக் கொண்டு மலைக்குகை ஒன்றின் உள்ளே சென்றுவிட்டான். காற்றளித்து உலகைக் காக்கும் தன் கடமையை மறந்தான். புத்திரன் நிலைகண்டு புலம்பிக் கொண்டிருந்தான்.
வாயு தன் கடமையைச் செய்யாததால் காற்று என்பதே எங்கும் இல்லை. உயிரினங்கள் மூச்சுவிட முடியாமல் திக்குமுக்காடின. தேவர்களும், காற்றில்லாமையால் உடல் பருத்து, நடக்கவும் நாதியற்று மரங்களைப் போல் நின்றனர். பாம்பு உருவமுடைய நாகர்கள் துவண்டு வீழ்ந்து கிடந்தனர். எல்லா உலகங்களும் காற்றின்மையால் படும் துன்பத்தைப் படைக்கும் கடவுளாகிய பிரமன் கண்டான். வாயுதேவன் இருக்குமிடந்தேடி வந்தான். காற்றின் வேந்தனைக் கண்டு ஆறுதல் மொழிகள் கூறலானான். பின்னர் மாருதியைத் தன் மலர்க்கரங்களால் தடவிக்கொடுத்தான். பிரமன் கைபட்ட அளவில், தூங்கி எழுந்தவனைப் போல, மாருதியும் எழுந்து நின்றான். தன் மகன் விழித்தெழுந்ததைக் கண்ட வாயுதேவன், குகைக்கு வெளியே வந்து உலவலானான். உயிரினங்களும், தேவர்களும், நாகர்களும் வாயுவின் உலவலால் பழைய நிலை பெற்றனர். வாயுதேவனைப் போற்றுவதற்காக, அவன் இருக்கும் இடம் தேடி, வருணன், இயமன், குபேரன், உருத்திரன் முதலான தேவர்கள் வந்து கூடிவிட்டனர்.
வாயு பெற்றெடுத்த ஆஞ்சநேயனைக் கண்டனர். அனைவரும் வாயுதேவன் மனம் மகிழுமாறு, ஆஞ்சநேயனுக்கு வரங்கள் பல தந்து வாழ்த்தினர். அதனோடு, தங்கள் படைகளால் எந்தக் காலத்தும் ஆஞ்சநேயனுக்கு அழிவு வராது என்று உறுதியும், வரங்களும் அளித்து விடை பெற்றுச் சென்றனர். பிரமன் முதலிய தேவர்கள்” அனைவரும் சென்ற பின்னர் சூரியன் வந்தான். “வாயுவின் மைந்தா! எனக்குள்ள ஒளியில் நூற்றில் ஒரு பங்கினை நீ பெறுவாயாக! எப்படிப்பட்டவரும் என் அருகே வர அஞ்சுவர். நீயோ, என்னைப்பற்றி உண்ணுவதற்காகவே என்னை நோக்கி வந்தாய்! நானும் உன் வீரவிளையாட்டை ரசிக்கவே உன்னைக் காய்ந்து கொல்லவில்லை. நிகரற்ற வீரனாக நீ நிலவுவாயாக! உன்னை இனி யாராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது” என்று வாழ்த்திச் சென்றான். பின்னர் இந்திரன் வந்தான். தான் ஏறி வந்த வெள்ளை யானையிலிருந்து கீழே இறங்கினான். மாருதியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான். தன் குலிசப்படை மாருதியின் கன்னத்தைத் தாக்கி வற்றச் செய்து விட்டதைக் கண்டான். வற்றிய கன்னம் நீண்டு விளங்குதலையும் கண்டு வருந்தினான். வருத்தம் தீர வரங்கள் பல தந்து வாழ்த்தினான். “இனி உனக்கு ஹனுமன் (வற்றிய கன்னமுடையவன்) என்ற பெயரே நிலவுவதாக!” என்று கூறி விடை பெற்றுச் சென்றான். அன்று முதல் ஆஞ்சநேயன்,‘அனுமன்’ எனப் பலராலும் அழைக்கப்படலானான்!
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.