எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 9 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை- சேப்பாக்கம் ஸ்டேடியம் உட்பட இந்தியாவின் முக்கிய 8 ஸ்டேடியங்களில் சிலவற்றில் பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட 8 நகரங்களில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த 8 மைதானங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து எச்சரித்தன. லஷ்கர்இதொய்பா தீவிரவாதி ஜெய்புதீன் அன் சாரியும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு இந்தியா வந்து நோட்டமிட்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உளவுத் துறையும் உலக கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளில் சிலர் ஊடுருவி உள்ளனர் என்று எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 ஸ்டேடியங்களைத் தகர்க்க குறி வைத்திருப்பது தெரிய வந்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 8 ஸ்டேடியங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் தமிழக அரசை மத்திய உள் துறை தற்போது அறிவுறுத்தி உள்ளது. இதன் முலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு அதிக தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற 16 மற்றும் 20-ந்தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டமும் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கு நடக்கும் போட்டிகளில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாதி அன்சாரி, இந்தியாவில் உள்ள முஜாகி தீன்களை ஸ்டேடியத்துக்குள் அனுப்பி, ரசாயண கலவைகளை சேர்த்து நாச வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் கைப்பை, குளிர்பானங்கள் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே ஸ்டேடியமும் அதன் நான்கு புற சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். பார்வையாளர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 16 நுழைவாயில்களிலும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்படும். போட்டி தொடங்கும் முன்பு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் 4 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கார்களில் வருபவர்கள் அந்த கார் எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள பாஸ் ஒட்டி இருந்தால்தான் பார்க் கிங் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மைதானம் முழுவதையும் தெளிவாக கண்காணிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒரு காமிரா அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரும் அமர்ந்து பார்வையாளர்களை கண்காணிப்பார். இவை தவிர அவசர தேவைக்காக மைதானத்தில் 100 அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறினார். சேப்பாக்கம் அருகில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை துணைக் கமிஷனர் சாரங்கன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மயில்வாகனன், உதவிக் கமிஷனர் தமிழ்ச் செல்வன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.