முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரி வள்ளலார் தருமச்சாலை ஞானசபை 4 ஆம் ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சின்னக்காவணத்தில் அருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையாரின் இல்லம் உள்ளது.

மின்விளக்கு கோபுரம்

இங்கு தருமச்சாலை ஞானசபை துவங்கி 4 ஆண்டுகள் நிறைவு விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதற்கான நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதற்கட்டமாக ரூ2.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயர் மின்விளக்கு கோபுரத்தை திறந்து வைத்தனர்.பின் நிகழ்ச்சியை முன்னிட்டும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அன்னதானம் வழங்கினர்.பொன்னேரி தொகுயில் உள்ள கூட்டுறவு வங்கி சங்க நிர்வாகிகள் பொன்னுதுரை,பானுபிரசாத்,கோளூர் கோதண்டன்,வெற்றிவேல் ராமலிங்கம் ,ஆறுமுகம் இதர நிர்வாகிகள் பொன்னேரி பா.சங்கர்,நாகராஜ்,சலீம்,பிள்ளையார்,சவுகத்அலி,பழவை சந்திரசேகர், திருப்பாலைவனம் இராதாகிருஷ்ணன்,மீஞ்சூர் பழனி,ஏலியம்பேடு சிவா மற்றும் தருமச்சாலை நிர்வாகிகள்,பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து