எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர்-ஆதி,நடிகை-நிக்கி கல்ராணி, இயக்குனர்-சரவணன் ஏ ஆர் கே, இசை திபு நின்னான் தாமஸ், ஓளிப்பதிவு- ஷங்கர் பி வி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.
மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள்.
இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான்.
மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை.
இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.
நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள்.
ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.
ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.
பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான்.
கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது.
பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.