எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லியில் நேற்று பாரம்பரிய முறையில், பாராளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற வண்ணமிகு பதவியேற்பு விழாவில் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜனாதிபதி தேர்தல்
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் (24-ம் தேதி) முடிவடைந்தது. முன்னதாக, நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏகமனதாக ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கருத்தொற்றுமை ஏற்படாததால் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக முன்னாள் லோக்சபை சபாநாயகர் மீரா குமார் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் கவர்னாராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வெற்றி எதிர்பார்கப்பட்ட நிலையில், தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. முடிவு கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றிப்பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட மீராகுமார் 34.35 சதவீத வாக்குகள் பெற்றார்.
அணிவகுப்பு மரியாதை
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையொட்டி மறுநாள் (நேற்று) புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விழா பாரம்பரியத்துடன் மிகப்பிரமாண்டமாக, வண்ணமிகு வகையில், பாராளுமன்ற மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பதவியேற்பு விழாவுக்கு முன், டெல்லி அக்பர் சாலை 10-ம் நம்பர் பங்களாவில் இருந்த 71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்தையும், அவரது துணைவியார் சவிதாவையும் ஜனாதிபதிக்கான ராணுவ செயலாளர் அனில் கோசலா, முறைப்படி ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து வந்தார். ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த்தை வரவேற்பதற்காக பிரணாப் முகர்ஜி தயாராக இருந்தார். பின்னர் இருவரும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர். அங்கு பிரணாப் முகர்ஜிக்கு கடைசியாக அவரது பாதுகாவலர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். மேடையில் பிரணாப் முகர்ஜியின் இடதுபக்கம் ராம்நாத் கோவிந்த் நின்றிருந்தார்.
ராம்நாத்துக்கு வரவேற்பு ...
பின்னர் கறுப்புநிற காரில் இருவரும் பாராளுமன்றத்தில் உள்ள மைய வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். காரில் ராம்நாத் கோவிந்த் வலது பக்கமாகவும், பிரணாப் முகர்ஜி இடதுபக்கமாகவும் அமர்ந்து சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ஜனாதிபதி பாதுகாவலர்கள் அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தும், நீலநிறத்தில் தலைப்பாகை அணிந்தும் சென்றனர். ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுன்றம் வரை செல்லும் சாலையில் பாதுகாப்பு பணியில் முப்படைகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த ஊர்வலம் பாராளுமன்றத்தின் 5-வது வாயில் வரை நடந்தது. 5-வது நுழைவாயிலில் நின்றிருந்த துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, லோக்சபை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் ஆகியோர் பிரணாப் முகர்ஜியையும், ராம்நாத் கோவிந்த்தையும் வரவேற்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் பாராளுமன்ற மைய வளாகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
ஜனாதிபதியாக பதவியேற்பு ...
பின் பாராளுமன்ற மைய வளாகத்தில் நடைப்பெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவிஏற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராம்நாத் கோவிந்த் இந்தி மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார். நாட்டின் அரசியல் சட்டத்தை பராமரித்தும், பாதுகாத்தும் அரசியல் சாசனம் மற்றும் சட்டப்படி நடந்துகொள்வேன் என்று ராம்நாத் கோவிந்த் உறுதி அளித்தார். ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றவுடன் அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்கின.
தலைவர்கள் பங்கேற்பு
பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ஆளும் பா.ஜ. கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கய்யா நாயுடு, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆந்திரா, பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டர்.
பொறுப்பேற்பு
பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் விழாவில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கட்சி வேறுபாடின்றி வணக்கம் தெரிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். ஒரு சில தலைவர்களுடன் வணக்கம் தெரிவித்து கையும் குலுக்கிக்கொண்டார். மேலும் ஒரு சில தலைவர்களிடம் இரண்டு கைகளால் வணக்கம் மட்டும் தெரிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார். பின்னர் பாராளுமன்ற மையமண்டபத்தில் கறுப்பு நிற காரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் சென்றனர். இந்தத்தடவை பிரணாப் முகர்ஜி வலது பக்கமும், ராம்நாத் கோவிந்த் இடது பக்கமும் அமர்ந்து சென்றனர். அப்போது வானமும் வரவேற்கும் விதத்தில் மழை பொழிந்தது. ஜனாதிபதி பாதுகாவலர்கள் அணிவகுத்து செல்ல கார் பின் சென்றது. மழை சாலையை சுத்தம் செய்வதுபோல் இருந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதும் ராம்நாத் கோவிந்த் கையெழுத்து போட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
முதல் குடிமகனாக ...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் பிறந்த ராம்நாத் கோவிந்த் பி.காம் பட்டதாரி. பின்னர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ள இவர் சிறந்த சட்ட நிபுணர் ஆவார். பீகார் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார். புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.