எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் நேற்று நடைபெற்றது.
துண்டு பிரசுரம்
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கொடி அசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் பணியானது முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 19 கிராம ஊராட்சிகள் முற்றிலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மீதமுள்ள 16 கிராம ஊராட்சிகளில் திறந்தவெளிஇயல் மலம் கழிக்கும் முறை அறவே இல்லை என்ற நிலையினை ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
உறுதிமொழி
பேரணி லோயர்பஜார், மார்க்கெட், காபிஹவுஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, பிரீக்ஸ் சாலை வழியாக பிரீக்ஸ் பள்ளியை அடைந்தது. பின்னர் அங்கு முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் தலைமையில் மாணவ, மாணவியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகளில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் ரேணுகா தேவி, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் காசிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், ரவிச்சந்திரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, கிரசண்ட் பள்ளி, ஜோசப் பள்ளி, பிரீக்ஸ் பள்ளி, சி.எம்.எம்.பள்ளி உள்ளிட்ட
பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர்கள், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்னூர்
இதேபோல் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குன்னூர் பெட்போர்டு பகுதியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் ஆறுமுகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மவுண்ட் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜ், பாரதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பள்ளி,. புனித மரியன்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி
அதேபோன்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி நரசிம்மன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மார்க்கெட், ஜான்சன் சதுக்கம், ராம்சந்த் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் குழுவினர், அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர்
கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை அடைந்தது. பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக முதல்வர் பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே
-
கால பைரவர் கோயில் மற்றும் கங்கையில் வழிபாடு நடத்தி விட்டு வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் : பா.ஜ.க. முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
14 May 2024வாரணாசி : உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு : புதுச்சேரி அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 May 2024புதுச்சேரி : கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
என்னை கண்டு பா.ஜ.வுக்கு அச்சம்: பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு
14 May 2024சண்டிகர் : என்னை கண்டு பா.ஜ.வினர் அச்சமடைகின்றனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறினார்.
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
15 May 2024