எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நேற்றுடன் நிறைவு
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 518 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கு நடந்த கலந்தாய்வில் பாதி இடங்கள் (50 சதவிதம்) மட்டுமே நிரம்பியுள்ளன.
ஆர்வம் குறைவு...
நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 963 பேர் அழைக்கப்பட்டதில் 83,562 பேர் மட்டும் கல்லூரிகளை தேர்வு செய்து ஒதுக்கீட்டு இடங்களை பெற்றனர். கலந்தாய்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதால் ‘ஆப் சென்ட்’ ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
90 ஆயிரம் இடங்கள் ....
கடந்த காலங்களில் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆப்சென்ட் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. 91,894 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த கலந்தாய்வில் 3 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் கூட 89 ஆயிரம் முதல் 90 ஆயிரம் இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.
மோகம் குறைந்து ...
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரம்பின. 2013-ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து இந்த வருடம் மொத்தம் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் குறைந்து தற்போது கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மெக்கானிக்கல் பிரிவில்...
இந்த வருடம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில்தான் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது இடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 2141 இடங்கள் இருந்த போதிலும் 1013 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரம் இடங்களுக்கு மேலாக காலியாக கிடக்கின்றன. அதே நிலையில்தான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பாடப்பிரிவும் உள்ளது.
துணை கலந்தாய்வு ...
சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 25,257 இடங்கள் இருந்த போதிலும் 8 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.) பாடப்பிரிவில் 22,519 இடங்கள் இருந்தாலும் 9,749 இடங்கள்தான் நிரம்பின. இந்த வருடம் முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த 44 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு 17-ந் தேதி நடக்கிறது. அதில் 1000 இடங்கள் நிரம்பினாலும் மீதமுள்ள இடங்கள் காலியாக கிடக்கும். அதனைத் தொடர்ந்து 18 ம் தேதி ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மூட வேண்டிய நிலைக்கு...
ஆண்டுக்கு ஆண்டு காலி இடங்கள் அதிகரித்து வருவதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்லூரி எதுவென்று ஆய்வு செய்து அதில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் எதிர்காலத்தில் சிறந்த கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 6 hours ago |
ஆனியன்ப்ரை1 week 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 4 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.