எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.16 - கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த சினிமாவை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சென்னையில் 9-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழா டிசம்பர் 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் திரையிடப்படவுள்ளது. இதன் துவக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் , டி.சிட்டிபாபு, இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், செய்தித்துறையின் செயலாளர் டாக்டர் எம்.இராஜாராம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்காரா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர் டி.டி.ஜி.தியான், செய்தித்துறையின் இயக்குனர் டாக்டர் பொ.சங்கர் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், திரைப்படக் கலையை பயிலும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
திரையுலக வரலாற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரை நினைவுகூராமல் திரைப்பட விழாவை தொடங்க முடியாது. தமிழ் துரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், மிகச் சிறந்த கலைநுட்பம் வாய்ந்த திரைப்படங்களை வழங்கி இந்திய திரை உலகத்திற்கு தமது அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
தமிழ் திரையுலகம் புதுமையைப் படைப்பதிலும், மக்களுக்கு தேவையான உயர்ந்த கருத்துகளை கலை வடிவத்தில் கொண்டு சேர்ப்பதிலும், திறமையாக பணியாற்றி வருகிறது.
உலக திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. நவீன தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டு அயல்நாட்டு படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்பட துறையினர் தமிழ் படங்களை அளிப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய சூழலில் மென்மேலும் தமிழ் திரைப்படங்களின் தரத்தை உலகதரத்திற்கு உயர்த்தும் விதமாக இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை இத்தகைய திரைப்பட விழாவை நடத்துவது பாராட்டுக்குரியது ஆகும்.
திரைப்பட கலையை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என்ற கல்லூரியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியிலிருந்து கலை பயின்று வெளியில் வரும் மாணவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு சிறந்த ப டங்களை வழங்கி இருக்கிறார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு, சிறந்த திரைக்கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்குவதோடு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது என்பதையும் இந்தத் தருத்தணத்தில் நினைவு படுத்த வரும்புகிறேன். திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு செய்துவரும் பல்வேறு நலப்பணிகளில் ஒன்றாகக்தான் இன்றைய தினம் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.
இந்தத் திரைப்பட விழாவிற்காக அரசின் நிதியை பெற வந்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து நல்ல முடிவை சொல்வார்கள். ஏனென்றால் திரைப்படத்துறைக்கு எல்லா விதங்களிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இன்னும் தொடர்ந்து செய்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த நமது திரை உலகத்தை மீட்டெடுத்து இன்றைய தினம் யார் வேண்டுமானாலும் திரைப்படத் துறையில் சாதிக்கலாம் என்ற ஒரு சமத்துவ நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சர்வதேச திரைப்பட விழாக்களின் மூலமாக பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தமிழ்நாட்டில் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்கு காட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் சென்று வந்தார்கள். அந்த விழாவில் நமது மாணவர்கள் தாயாரித்த நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அந்த படங்களுக்கு அங்கு வந்திருந்த திரைப்படப் பார்வையாளர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளார்கள் என்கின்ற செய்தியை இங்கே தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். இதேபோல இனிவரும் ஆண்டுகளிலும் உலக அளவில் தமிழ் திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளை வெல்ல வேண்டும். அதற்காக இந்த திரைப்பட விழா பயன்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மென்மேலும் திரைப்பட ரசனையையும், திரைப்படக்கலையையும் வளர்ப்பதற்காக உங்களது அமைப்பு திரைப்பட விழாக்களை நடத்துவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். 2003-ம் ஆண்டிலிருந்து இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த திரைப்பட விழாவை தொடங்கியபோதே அப்போது ஆட்சியிலிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு இந்த விழாவுக்கு ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
உலக அளவில் விருது பெற்ற 60 திரைப்படங்கள் உட்பட 154 திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கிறது. ஏறத்தாழ 44 நாடுகளிலிருந்து திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன என்கிற செய்தி திரைப்படத்தை கல்வியாக பயிலுகின்ற மாணவர்களுக்கும், விஷூவல் கம்யூகேஷன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் பெரும் ஆர்வமளிக்கும் செய்தியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசின் செய்தித்துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சேகர் கபூர், நடிகர் சரத்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினார்கள். நடிகர்கள் பார்த்திபன், வெங்கட்ராம் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். விழாவின் முடிவில் படங்கள் திரையிடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 6 hours ago |
மினி பான் கேக்5 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.