எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாக கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், இன்று காலை 11 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி கோவில்...
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதால் கோவில் பிரகாரங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு புராதன சிலைகள், வளையல்கள், பொம்மைகள், சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் கடைகளும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளன.
கிழக்கு கோபுர பகுதியில்...
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. இதனால் வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் இருந்த தூண்கள் பலத்த சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீடியோ பதிவு செய்த தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜனிடமும் விசாரணை நடத்தினார்கள்.
துணை முதல்வர் ஆய்வு...
இதற்கிடையில் தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து பார்வையிட்டார். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அவர் ஆய்வு செய்தார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிப்பு இல்லை...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீர வசந்தராயர் மண்டபத்தில் பிளவுபட்டு தொங்கிக் கொண்டிருந்த மேற்கூரை கற்களில் பசுபதீஸ்வரர் சன்னதிக்கு கிழக்கு பக்கம் நான்கு கற்கள் கீழே விழுந்துள்ளது. இதனால் அருகில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதிக்கோ அதன் மேற்கூரையிலோ எந்தவித பாதிப்பும் இல்லை என்று கோவில் கண்காணிப்பாளர் கம்சன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கோவிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த வியாபார கடைகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று காலைக்குள்...
எனவே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றும் படி கோவில் இணை ஆணையர் நடராஜன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 11 மணிக்குள் கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுநல மனு...
முன்னதாக, குமரியைச் சேர்ந்த வக்கீல் அபுல்கலாம் ஆசாத்சுல்தான், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பராம்பரியமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த தீ விபத்து பக்தர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நடந்த தீ விபத்துக்கு குளிர்சாதன வசதி, மின் இணைப்புகள் தான் காரணம். மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்பட சில கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளன. கோவில்களின் உள்ளே இருக்கும் கடைகளில் ஏற்பட்ட மின்கசிவால் நடந்த விபத்துகள் ஏராளம். எனவே கலாசாரத்தின் அடையாளங்களாக திகழும் கோவில்களின் பழமையை பாதுகாக்கவும், அவற்றின் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதைத் தடுக்கவும், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
12 பேர் கமிட்டி ....
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 12 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் உள்ள பூக்கடைகளை தவிர பிற கடைகளையும், புதுமண்டபம் பகுதியில் உள்ள 300 கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினர்...
இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்குமார்பாண்டே தலைமையில், 6 பேர் செவ்வாய்கிழமை அன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதையும் பார்வையிட்டு படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோவில் இணை கமிஷனர் நடராஜனை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீ விபத்து குறித்து விசாரித்தனர். நேற்றும் அவர்கள் கோவிலில் ஆய்வுப் பணியை தொடர உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.