எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்ஸ்பர்க் : வாண்டரர்ஸ் ஒருநாள் போட்டியில் தொடரை இழக்கும் அபாயத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை முதலில் 289 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் திருத்தப்பட்ட இலக்கான 28 ஓவர்களில் 202 ரன்கள் இலக்கை 25.3 ஓவர்களில் விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து ஷிகர் தவணின் சதம், கோலியின் 75 ரன்கள், இவர்க்ள் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்த 158 ரன்கள் பிறகு தோனியின் பினிஷிங் மூலம் 289 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் ஸ்கோர் திருத்தப்பட 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும், ஆனால் 25.3 ஓவர்களில் 207/5 என்று அதிரடியில் வெற்றி பெற்று தொடரில் 3-1 என்று பின் தங்கியுள்ளது.
பிங்க் சீருடையில் 6-வது போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றது. டிவில்லியர்ஸ் அணிக்கு வந்தவுடனேயே அந்த அணியின் உடல் மொழியே வேறு ஒரு தன்னம்பிக்கையை எட்டியதைப் பார்க்க முடிந்தது. அதனால்தான் முதல் 3 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை நேற்று புரட்டி எடுத்தனர். இவர்கள் இருவரும் 11.3 ஒவர்கள் வீசி 119 ரன்கள் விளாசப்பட்டனர். அதாவது குல்தீப் யாதவ் 6 ஓவர்களில் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாஹல் 5.3 ஒவர்கள் 68 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணி ஆடிய ஷாட்கள் சில திகைப்பூட்டும் புதுவகை ஷாட்களாக அமைந்தன. விக்கெட் கீப்பர் கிளாசன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்களையும், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும் விளாசியதோடு 47 பந்துகளில் 72 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சாஹல், குல்தீப் யாதவ்வை அடித்து நொறுக்குவது என்ற திட்டத்துடன் களமிறங்கியது போல் தெரிகிறது. பெலுக்வயோ இறங்கி 5 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்தார், வெற்றிக்கான ஷாட்டே சிக்ஸ்தான்.
தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் மார்க்ரம் அருமையாக ஆடி 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது இடி-மின்னல் மழைக்கு முன்பாக பும்ராவின் சற்றே ஃபுல் லெந்த் பந்தை ஷார்ட் பிட்ச் பந்தாக தவறாகக் கணித்து லெக் திசையில் அடித்து ஆட நினைக்க பந்து கால்காப்பைத் தாக்கியது, நடுவர் அவுட் கொடுக்க ரிவியூ அதனை உறுதி செய்தது. ஆனால் 7.2 ஒவர்களில் 43 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை பெற்றது தென் ஆப்பிரிக்கா,
பிறகு இடி-மின்னல்-மழை தாக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் நின்று போனது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 28 ஓவர்களில் 202 ரன்கள் என்று திருத்தப்பட்டது.
ஆட்டம் தொடங்கியவுடனேயே 9வது ஓவரில் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார், அந்த ஓவரில் அவர் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். குல்தீப் 2வது ஓவரையும் சிக்கனமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 11 ஓவர்களில் 57/1. வெற்றிக்கு 17 ஓவர்களில் 145 ரன்கள் தேவையாக இருந்தது. அதன் பிறகு பாண்டியா ஓவரில் ஆம்லா பீட்டன் ஆனார், ஒரு இன்சைடு எட்ஜும் எடுத்து அதிர்ஷ்டம் அமைய எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் ஆம்லா. 16 ஓவர்களில் 137 ரன்கள் தேவை.
டுமினி சர்ச்சைக்குரிய அவுட்:
குல்தீப் யாதவ் தன் 3வது ஓவரை வீச வந்த போது 10 ரன்களில் இருந்த டுமினி நன்றாக மேலேறி வந்து ஆட முற்பட்டார், ஆனால் குல்தீப்பின் பந்து வந்த விதம் அவர் அக்ராஸ் த லைனில் ஆட வைத்தது கால்காப்பில் வாங்கினார் நடுவர் ஜீலே கையை உயர்த்தினார், தென் ஆப்பிரிக்காவிடம் ரிவ்யூ எதுவும் இல்லை. அதிருப்தியுடன் வெளியேறினார் டுமினி, சுமார் 3-4 அடி அவர் மேலேறி வந்து ஆடியிருப்பார். இதையெல்லாம் அவுட் கொடுப்பது அரிதே. டிவில்லியர்ஸ் களமிறங்கி 2 ரன்களை எடுக்க 13 ஓவர்கள் முடிவில் 70/2.
புவனேஷ்வர் குமாரின் அற்புத கேட்ச்:
அடுத்த பாண்டியா ஓவரில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வர டிவில்லியர்ஸ் அதனை முறையாக டீப் மிட்விக்கெட் பவுண்ட்ரிக்கு அனுப்பினார். மறுமுனையில் ஹஷிம் ஆம்லா 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை ஒரு சிப் ஷாட் ஆடினார், பந்து லாங் ஆஃபில் சிக்ஸ் நோக்கிச் சென்றது, பவுண்டரிக்கு வெகு அருகே புவனேஷ்வர் குமார் உயரே எழும்பி தலைக்கு மேல் கேட்ச் எடுத்தார், ஆனால் சமநிலை குலைந்து எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை மீண்டும் உள்ளுக்குள் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் வந்து பிடித்தார். நெருக்கடியான தருணத்தில் அபாரமான கேட்ச் அது. ஆம்லா வெளியேற மில்லர் அதே ஓவரின் கடைசி பந்தை அசுர ஸ்வீப் ஷாட்டில் பவுண்டை விளாச 15 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 83/3. குல்தீப் யாதவ் இதுவரை அருமையாக வீசி 4 ஒவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தார்.
திருப்பு முனை ஓவர்: சாஹலுக்கு விளாசல்
16வது ஓவரில் யஜுவேந்திர சாஹல் வீச அழைக்கப்பட்டார். 4-வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆன பந்தை டிவில்லியர்ஸ் முழங்காலை சற்றே மண்டியிட்டு மிட்விக்கெட்டில் ஒரே தூக்கு தூக்க சிக்ஸ் ஆனது, அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அமைய அதனை மீண்டும் மிட்விக்கெட்டில் பளாரென்று சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரிலேயே சாஹல் 17 ரன்களை கொடுத்தார்.
அடுத்த ஓவரை பாண்டியா வீச 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த டிவில்லியர்ஸ், பாண்டியாவின் பந்தை மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க நினைத்துத் தூக்க லாங் லெக்கில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானதல்ல. 11 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடினமாகவே தோன்றியது.
ஷ்ரேயஸ் ஐயர் மில்லருக்கு விட்ட கேட்ச்... அல்ல மேட்ச்... அல்ல தொடர்:
பாண்டியா ஒருமுனையில் அபாரமாக வீச டேவிட் மில்லரை ஒரு முறை பீட்டனும் செய்திருந்தார், முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்த சாஹல் அடுத்த ஓவரை வீச வர டேவிட் மில்லர் மிடில் அண்ட் ஆஃபுக்கு வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் முன் விளிம்பில் பட்டு பந்து உயரே எழும்ப ஷ்ரேயஸ் ஐயர் வலது புறம் ஓடி பிடிக்க முயன்றார் பந்து அவரது மணிக்கட்டில் பட்டு தவறியது. இது மிகப்பெரிய கணமாக அமைந்தது, கேட்சை விட்டதோடு மேட்சையும் விட்டு இந்திய அணி தொடரை முடிக்க வேண்டிய வாய்ப்பையும் தற்காலிகமாக இழக்க நேரிட்டது.
இவர் கேட்ச் விட்டதனால் புத்துயிர் பெற்ற டேவிட் மில்லர் அடுத்த பாண்டியா ஓவரில் மிட் ஆஃப்க்கு மேல், பாயிண்டுக்கு மேல் மிட்விக்கெட்டுக்கு மேல் என்று 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது 19 ஓவர்கள் முடிவில் 121/4. மில்லர் 13 பந்துகளில் 21, கிளாசன் 3 ரன்கள். பிறகு சாஹல் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கொடுக்க. மறுமுனையில் குல்தீப் யாதவ்வை கிளாசன் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசி அடுத்து சிங்கிள் எடுத்து மில்லர் கையில் கொடுக்க அவர் குல்தீப் யாதவ்வின் நல்ல பந்தைக் கூட மிட்விக்கெட் மீது அசுர சிக்ஸ் அடித்தார். 42 பந்துகளில் 57 ரன்கள் தேவை என்று தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியின் வெளிச்சம் கிடைத்தது.
பிறகு சாஹலை கிளாசன் ஒரு பவுண்டரி, பிறகு லாங் ஆன் மேல் ஒரு மிகமிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கொடுக்க சாஹல் 4 ஓவர்களில் 45 ரன்கள் என்று விளாசப்பட்டார், ஆனால் மில்லர் கொடுத்த கேட்சை ஐயர் எடுத்திருந்தால் ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தோற்றிருக்கும் சாஹலும் புகுந்திருப்பார்! கடைசியில் சாஹலின் ஷார்ட் பிட்ச் பந்தை மீண்டும் ஒரு அரக்க சிக்ஸ் அடித்து 28 பந்துகளில் 39 ரன்கள் என்று ஆடி வந்த போது சாஹல் ஒரு பந்தை சற்றே வேகம் குறைவாக வீச பந்து உள்ளே வந்தது, கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார்.
அடுத்த ஓவரை குல்தீப் வீச கிளாசன் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார், பெலுக்வயோ இதே ஓவரில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்து குல்தீப் யாதவ் ஸ்பெல்லை காலி செய்தார்.
பெலுக்வயோ என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை அடுத்த சாஹல் ஓவரை பிரித்தார். சாஹல் 3 போட்டிகளில் வீசியது போல் வேகத்தைக் குறைத்து வீசினார், ஆனால் தடதடவென மேலேறி வந்த பெலுக்வயோ நேராக ஒரு சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் மிட்விக்கெட் சிக்ஸ். இத்துடன் ஸ்கோர் 207/5 என்று ஆனது, தென் ஆப்பிரிக்க அணியின் அதிர்ஷ்ட பிங்க் வெற்றி தொடர்ந்தது. பெலுக்வயோ 5 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட், கிளாசன் 23 பந்துகளில் 47 நாட் அவுட்.
ஆட்ட நாயகனாக விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி பேட்டிங்கில் இடி மின்னல் நிறுத்தத்துக்குப் பிறகு தவண், ரஹானே, பாண்டியா ஆகியோரது விக்கெட்டை குறைந்த இடைவெளியில் இழக்க 20-30 ரன்கள் குறைவானது, மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக வீச கடைசி 16 ஓவர்களில் 92 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். 35வது ஒவரில் இந்திய அணி 197/2 என்று நல்ல நிலையில்தான் இருந்தது, அதன் பிறகு பேட்டிங் சரிவு, நல்ல பந்து வீச்சினால் ரன்கள் மட்டுப்பட, பிறகு மழைகாரணமாக டக்வொர்த் முறையில் ரன் இலக்குக் குறைக்கப்பட, சாஹல், குல்தீப் வெளுத்து வாங்கப்பட, டேவிட் மில்லருக்கு ஷ்ரேயஸ் ஐயர் முக்கியமான கேட்சை விட இந்திய அணி தோல்வி கண்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.