எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செஞ்சூரியன் : இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
பும்ராவுக்கு ஓய்வு...
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி-20 போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இந்திய அணியில் வயிற்று பிரச்சினையால் அவதிப்படும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்தியா பேட்டிங்...
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர்.
தப்பி பிழைத்த தவான்...
கிறிஸ் மோரிஸ் வீசிய முதல் பந்திலேயே ஷிகர் தவான் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து அவரது பேட்டில் உரசிய பின்னரே காலுறையில் படுவது தெரிந்தது. இதனால் தவான் தப்பி பிழைத்தார். ஆனால் முதல் ஓவர் மெய்டன் ஆனது. அடுத்த ஓவரில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபிள்யூ. ஆகி பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா ஆட வந்தார்.
கோலி 1 ரன்...
முதல் ஓவரை மெய்டனாக்கிய தவான், கிறிஸ் மோரிசின் அடுத்த ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் தனது பங்குக்கு 24 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சாதனை நாயகன் கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் (5 பந்து) வீழ்ந்தார். ஜூனியர் டாலாவின் ஓவரில் சற்று எழும்பி வந்த பந்து அவரது கையுறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக விழுந்தது.
மனிஷ் - டோனி...
பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே அதிரடி காட்டினார். சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியின் ஓவரில் 2 சிக்சர்களை தூக்கியடித்தார். அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டிய போது, சுரேஷ் ரெய்னா 31 ரன்களில் (24 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவுடன், விக்கெட் கீப்பர் டோனி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய டோனி, போக போக துரிதமாக மட்டையை சுழட்டினார். பாண்டேவும், தனக்கே உரிய பாணியில் சில சூப்பரான ஷாட்டுகளை அடித்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டோனி 2 சிக்சரும், 3 பவுண்டரிகளும் சாத்தினார். இருவருமே டி-20 போட்டியில் தங்களது 2-வது அரைசதங்களை கடந்து அசத்தினர். டி-20 முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
மனிஷ் பாண்டே 79 ரன்களுடனும் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
189 ரன்கள் இலக்கு...
அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மட்ஸ் 2 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 26 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் இந்திய பந்து வீச்சை நொறுக்கினர். குறிப்பாக கிளாசென், யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது கிளாசென் 69 ரன்களில் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆனார். பின்னர் வந்த டேவிட் மில்லர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
தென் ஆப்பிரிக்கா வெற்றி...
ஆனாலும் டுமினி-பெஹர்டைன் ஜோடி போட்டு தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. தென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி (64 ரன், 40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பெஹர்டைன்(16 ரன்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 7 சிக்சர் உள்பட 64 ரன்களை வாரி வழங்கியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தற்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கும் நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி கேப்டவுனில் நாளை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 13 sec ago |
ஆனியன்ப்ரை6 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கங்கையின் தத்துப்பிள்ளை நான்: பிரதமர் நரேந்திரமோடி உருக்கம்
14 May 2024வாரணாசி : கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான் என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார்.
-
ராகுலுக்கு சஞ்சீவ் விருந்து
14 May 202417-வது ஐ.பி.எல்.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு: புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரும் பி.சி.சி.ஐ.
14 May 2024மும்பை : விரைவில் ராகுல் டிராவிட் ஓய்வு பெறவுள்ள நிலையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே
-
கால பைரவர் கோயில் மற்றும் கங்கையில் வழிபாடு நடத்தி விட்டு வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் : பா.ஜ.க. முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
14 May 2024வாரணாசி : உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு : புதுச்சேரி அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 May 2024புதுச்சேரி : கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு
14 May 2024சென்னை : தடகள தேர்வு முறையை தமிழ்நாடு அரசு டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக...
-
என்னை கண்டு பா.ஜ.வுக்கு அச்சம்: பிரசாரத்தில் கெஜ்ரிவால் வியப்பு
14 May 2024சண்டிகர் : என்னை கண்டு பா.ஜ.வினர் அச்சமடைகின்றனர் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறினார்.
-
ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு
14 May 2024துபாய் : ஐ.சி.சி-யின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
15 May 2024