முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபிக்கடலில் தீடீர் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 14 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென்மேற்கு அரபிக்கடலில் தீடீர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு...

தமிழகத்தில் ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்தினாலும் மறுபக்கம் கோடை மழையும் கொட்டி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த திடீரென காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு...

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மண்டலமாக மாற உள்ளதால் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக பழனியில் 4 சென்டி மீட்டர் மழையும் உடுமலைப்பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து