எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாள் விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.மாணிக்கம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ், 404 பயனாளிகளுக்கு ரூ.1,61,04,584 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழகஅரசின் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் கடந்த 09.05.2018 முதல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர்கள் ஆகியோர் வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு 10 வட்டங்களில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து கிராமங்களின் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனடியாக தீர்த்துக்கொள்ளவும் இப்பசலி தீர்வாயம் உதவியாக இருக்கும். வாடிப்பட்டி வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் மூலமாக இதுவரை 1692 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 134 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 854 மனுக்கள் நிலுவையில் உள்ளது. அரசு விதிகளுக்குட்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
வாடிப்பட்டி வட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டத்தில் உரிய தீர்;வு காணப்பட்டு 95 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 127 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்களுக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் அதிக சேவை வழங்கி வரும் அம்மா திட்டம் மூலம் இதுவரை மதுரை மாவட்டத்தில் 1,90,000 மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 64 பயனாளிகளுக்கு ரூ.64000ஃ- மதிப்பில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் இயற்கை மரணம் அடைந்த 64 நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.12,10,000 மதிப்பிலான உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 51 பயனாளிகளுக்கு ரூ.4,24,000 மதிப்பிலான உதவித்தொகையும், 95 பயனாளிகளுக்கு ரூ.1,44,00,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 64 பயனாளிகளுக்கு இணையதள முழுப்புல பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 63 பயனாளிகளுக்கு இணையதள உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.200 மதிப்பிலான புளுரோட்டஸ் கிட் ஒன்றும், ஒரு பயனாளிக்கு ரூ.4480 மதிப்பிலான சூரியஒளி விளக்குப்பொறியும், ஒரு பயனாளிக்கு ரூ.1904 மதிப்பிலான 20 கிலோ உளுந்து வம்பன்-6 விதை பையும் என மொத்தம் 404 பயனாளிகளுக்கு ரூ.1,64,04,584 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 1427ஆம் பசலி வருவாய் தீர்வாயம், வாடிப்பட்டி வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய குமாரம் மற்றும் தெத்தூர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், அலங்காநல்லூர் கிராம உதவியாளர் அவர்களுக்கும், தனிச்சியம் நில அளவர் அவர்களுக்கும், தனிச்சியம் வருவாய் ஆய்வாயர் அவர்களுக்கும், தென்கரை உதவி வேளாண் அலுவலர் அவர்களுக்கும், நீரேத்தான் உதவி தோட்டக்கலை அலுவலர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச்சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.