முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநில புதிய முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்

சனிக்கிழமை, 19 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக மத சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி நாளை திங்கட்கிழமை பதவியேற்கிறார். எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து அங்கு புதிய ஆட்சி மலருகிறது.
கர்நடாக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணியளவில் கூடியது. இதில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர். பின்னர் பிற்பகல் 3.30-க்கு முதல்வர் எடியூரப்பா, உணர்ச்சிமிகு உரையாற்றினார். அப்போது பா.ஜ.க-வுக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளதாகக் கூறி தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார்.

இந்நிலையில், ம.ஜ.த கட்சித் தலைவர் குமாரசாமி, கவர்னர் வஜுபாய் வாலாவை நேற்று இரவு 7.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை தொடர்ந்து அவரை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து அம்மாநில புதிய முதல்வராக குமாரசாமி நாளை திங்கட்கிழமை  பதவியேற்று கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி கூறியதாவது,

பாரதீய ஜனதா கட்சியால் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். கவர்னரை சந்தித்து நான் உரிமை கோரினேன். அவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து வரும் 21-ம் தேதி நான் முதல்வராக பதவியேற்கிறேன். பெங்களூரில் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம்  பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். எங்கள் அரசு நிலையான ஆட்சியை தரும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார். எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி மலருகிறது. 36 உறுப்பினர்களை கொண்ட குமாரசாமி கட்சிக்கு 78 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து