முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் - சவுரவ் கங்குலி நம்பிக்கை

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது. ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி பெறும்

இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

அர்ஜூனுக்கு வாழ்த்துக்கள்

மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து