எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருச்சியில் பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து திருச்சி சென்றார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பங்கு நீர் கிடைக்க வேண்டும்
டெல்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய, காவிரி நதிநீர் ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிற்கும் உறுப்பினர்களை நியமித்து விட்டார்கள், கேரளாவிற்கும் நியமித்து விட்டார்கள். பாண்டிச்சேரியிலும் நியமித்து விட்டார்கள், ஆனால் கர்நாடகம் இன்னும் நியமிக்கவில்லை. இது மத்திய அரசுக்கு வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது, விரைந்து உறுப்பினர்களைப் பெற்று, காவிரி ஆணையத்தினுடைய கூட்டம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு நீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து குறிப்பிட்டிருக்கின்றேன். பிரதமர் மோடியிடமும் இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது.
அணையை திறப்பது எப்போது?
மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடி வந்தால்தான் நீரை திறந்து விடமுடியும். இப்பொழுது கர்நாடகாவில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது, விரைவாக மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கின்றோம். எங்களைப் பொறுத்தவரைக்கும், ஆணைய கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டுமென்று ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது, மத்திய அமைச்சர் கட்காரிக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இப்பொழுது, நிதிஆயோக் கூட்டத்திலே கலந்து கொண்டு பேசும் பொழுதும், இது வலியுறுத்தி பேசப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சரை சந்திக்கின்ற பொழுதும் இது பற்றி விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
கேள்வி: இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பி விடுமா?
பதில்: இறைவனிடம்தான் இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரைக்கும் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டையும் அமைத்து, விரைவாகக் கூட்டத்தைக் கூட்டி, நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதற்குண்டான வழிவகை செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி கூறியிருக்கிறோம்.
கேள்வி: தங்கத்தமிழ்ச்செல்வன் உட்பட 8 எம்.எல்.ஏ-க்கள் உங்கள் அணியில் இணையப் போவதாக சொல்கிறார்களே, உண்மையா?
பதில்: தெரியவில்லை, நீங்கள்தான் சொல்கிறீர்கள், வந்து இணைந்தால் பாராட்டுக்குரியதுதான்.
கேள்வி: அவர்கள் வந்தால், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொல்கிறார்களே?
பதில்: எப்படி அமைச்சர் பதவி கொடுக்க முடியும்? நீங்கள் எல்லோரும் விவரம் தெரிந்தவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீங்கள்தான் பத்திரிகையில் வெளியிடுகிறீர்கள், பெரும்பாலான மக்களும் இதைப் பார்த்து, படித்துத்தான் தெரிந்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது, சட்டரீதியாக உங்களுக்குத் தெரியும்.
கேள்வி: இடைத்தேர்தல் வரவேண்டுமென்பதற்காக டி.டி.வி. அணி திட்டமிட்டு செய்வதாக சொல்கிறார்களே?
பதில்: நீங்கள் தான் சொல்கிறீர்கள், அப்படி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், சட்ட ரீதியாக அனைத்துமே தெரியும். இன்றைக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது எப்படி இடைத்தேர்தல் வரும்? இவ்வாறு முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் பேட்டி
பின்னர் அவர் மயிலாடுதுறை சென்றார். அங்கும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காவிரி குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்தும் பேசினார்.
அதில், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இனிதான் தீர்ப்பு வரும். மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் 18 பேரும் மீண்டும் வந்தால் நல்லதுதான். அவர்கள் மீண்டும் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயார். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியது. அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நினைக்கிறேன். தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.
காவிரி ஆணைய உறுப்பினர்களை கர்நாடகா விரைவில் அறிவிக்க வேண்டும். காவேரி ஆணைய கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இப்போதுதான் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. போதிய நீர் வந்தவுடன் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.