எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு, ஜன. 25 - இந்திய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி முதல் நாளன்று முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டை இழந்து 335 ரன்னை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் மைக்கேல் கிளார்க் இருவரும் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதனால் அந்த அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான ஜாஹிர்கான், இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரது பந்து வீச்சு எடுபடவில்லை. சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் 2 விக்கெட் எடுத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும்
கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சார்பில், கோவன் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்சில் 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 335 ரன்னை எடுத்து உள்ளது. பாண்டிங் 137 ரன்னுடனும் , கேப்டன் கிளார்க் 140 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கோவன் மற்றும் வார்னர் இருவரும் முன்னதாக ஆட்டத்தை துவக்கினர். இருவரும் இணைந்து மெதுவாக ஸ்கோரை நகர்த்தினர். ஆஸி. அணியின் ஸ்கோர் 26 -க்கு சென்றது.
அப்போது ஒரு முனையில் ஆடிக் கொண்டிருந்த வார்னர் ஜாஹிர்கான் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி வெளியேறினார். அவர் 23 பந்துகளைச் சந்தித்து 8 ரன்னை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து எஸ். மார்ஷ் களம் இறங்கினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த அணியின் ஸ்கோர் 31 -க்கு சென்ற நிலையில் மார்ஷ் ஆட்டம் இழந்தார். அவர் 3 ரன் மட்டும் எடுத்தார்.
அடுத்ததாக முன்னாள் கேப்டன் பாண்டிங் களம் இறங்கினார். அவரும் கோவனும் இணைந்து நிதானமாக ஆடினர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் சிறிது சிறிதாக உயர்ந்தது.
இதற்கிடையே ஆஸி. அணி 17.4 ஓவரில் 50 ரன்னை எட்டியது.
அடுத்த சிறிது நேரத்தில் துவக்க வீரராக இறங்கிய கோவன் ஆட்டம் இழந்தார். அவர் அஸ்வின் வீசிய பந்தில் லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 63 பந்தைச் சந்தித்து 30 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் மைக்கேல் கிளார்க் பாண்டிங்குடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
பாண்டிங் மற்றும் கிளார்க் ஜோடியை பிரிக்க கேப்டன் சேவாக் நிறைய யுக்திகளை கையாண்டார். ஆனால் ஒன்றும் பலன் தரவில்லை. இதனால் சேவாக் ஏமாற்றம் அடைந்தார்.
முன்னாள் கேப்டன் பாண்டிங் 254 பந்தை சந்தித்து 137 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம்.
கேப்டன் மைக்கேல் கிளார்க் 188 பந்துகளைச் சந்தித்து 140 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்.
ரிக்கி பாண்டிங் 69 பந்தில் 50 ரன்னை எட்டினார். பின்பு 164 பந்தில் 100 ரன்னை எட்டினார். கேப்டன் கிளார்க் 69 பந்தில் 50 ரன்னை எட்டினார். பின்பு 133 பந்தில் 100 ரன்னைக் கடந்தார்.
ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் கிளார்க் இருவரும் இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 251 ரன்னை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் சேவாக் 2-ம் நாளன்று புதிய வியூகத்துடன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் 62 ரன்னை விட்டுக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் 81 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.