முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவோம்: மோடி

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

370 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கொடியேற்றிய பின்னர் அவர் தனது 5-வது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். 2022-க்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் நிறைவேற்றப்படும்.

அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2014-ல் நம்மை பார்த்து சிரித்தவர்கள் ஏராளம். தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது கைகொட்டி சிரித்தார்கள், ஆனால் இன்று அந்த தூய்மை இந்தியா திட்டம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது என்று தெரிவித்தார் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து