முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் சிலைக்கு ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலையணிவிக்கின்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 16 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 17-தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலையணிவிக்கின்றனர்.
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலத்தின் அருகில்அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு தமிழ்நாடுஅரசின் சார்பில்  மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைஅமைச்சர் ஜெயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறைஅமைச்சர். பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் வளர்மதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துவர் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து