எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, ஏப்.17 - தமிழகத்தில் வரும் 24_ந் தேதி பாராளூமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஆதீனம் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதி சறுக்குபாறை அருகே நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மதுரை ஆதீனம் பேசியதாவது,
இந்த நாட்டில் தீவீரவாதம் ஒழிய, விலைவாசி குறைய நதிகள் தேசியமயமாக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அருடைய ஜாதகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா பிரமராக வருவார்.
முன்பு இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோருக்கு இருந்தது. ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பு இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும். அதற்கு அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.
திருஞானசம்பந்தர் பாடல்களில் உள்ள கருத்துகளுக்கு பொருத்தமான அனைத்து தகுதிகளும் முதல்வர் ஜெயலலிதாவுக்குதான் மட்டுமே உள்ளது. கடவுள் வழிபாடு அவரை காத்து வருகிறது. அதிமுகவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலளர்கள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் செயல்பாடுகள் சரியில்லை என்றால் உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
தமிழகத்தில் தற்பொழுது மின் உற்பத்தி நிலையங்களில் ஆங்காங்கே பழுது எற்படுவதன் காரணமாகதான் மின்வெட்டு ஏற்படுகிறது. 2014_ல் ஜெயலலிதா பிரதமரானதும் தமிழகத்தில் முழுமையான மின்சாரம் கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா தற்பொழுது திருச்சி நாடாளுமன்ற அதிமுகவேட்பாளர் குமார் உருவத்தில் திருச்சியில் போட்டியிடுகிறார். எனவே அந்த குமாரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, துணைமேயர் ஆசிக் மீரா, கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அய்யப்பன், சுதாகர், தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
=============
நரேந்திரமோடியை நல்லவர் என்று கூறிய கருணாநிதியை
தமிழகத்தை சார்ந்த முஸ்லீம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
திருச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி
திருச்சி, ஏப்.17_
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திருச்சி சங்கம் ஹோட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய மக்களுக்கு பாதுகாவலானாக மத்திய காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் குறிப்பாக தமிழ்நாடு தார்ஹித் சமாத் திமுக ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளை திமுகவிற்கு ஆதரவாகவும், தேனி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகவும், இருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஏன் 36 தொகுதிகளில் அவர்கள் ஆதரவு திமுகவிற்கு அளிக்கப்போவதாக கூறியிருப்பது எங்களுக்கு புரியவில்லை. கருணாநிதி மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தபோது ஆதரவு கொடுத்தவர்தான் என்பதை தமிழ்நாடு தாவ்ஹித் ஜமாத் மறந்து விடக்கூடாது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேந்திரமோடி நல்லவர் என்று கருணாநித கூறியிருந்தது அவரது நம்பகத்தன்மை இல்லாதது என்பதை இஸ்லாமிய மக்கள் புரிந்து செயல்படவேண்டும். கருணாநிதியை பொருத்தவரை மத்தியில் எந்த அரசு வருகிறதோ அந்த அரசிடம் திமுகவிற்கு பதவிகள் பெற துடிப்பவர் அவர். ஒருவேளை முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வந்தாலும் அவருடன் கருணாநிதி 3 மந்திரிகள் வேண்டுமென கேட்கத்தயங்கமாட்டார். எனவே காங்கிரசை தமிழக முஸ்லீம் ஆதரிக்க வேண்டும்.
நரேந்திரமோடியை நல்லவர், வல்லவர் என 20 நாட்களுக்கு முன்பு கூறிய கருணாநிதி இப்பொழுது நேர்மாறாக பாரதீய ஜனதாவை திட்டுகிறார். இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் மாயவரம் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றிபெற்றிருக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதேபோல ப.சிதம்பரம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பேசினார். அவரும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை நான் மதிப்பதில்லை. கொஞ்ச நாளாகவே கருணாநிதி பிரச்சாரத்தில் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. மத்தியில் மதசார்பற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆதரிப்பேன் என்று கூறுகிறார். திடீர் என நன்றி மறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என கூறுகிறார். இப்படி மாறிமாறி பேசுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளை நீங்கள் பாருங்கள். கருணாநிதி கூட்டணியில் உலக தலித் நாயகன் திருமாவளவன் உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கிறது.
பாரதீய ஜனதா கூட்டணியை பாருங்கள் விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் தேர்தலுக்குமுன்பே மொட்டை போட்டவர் பொன்.ராதாகிருஷ்ணன். தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜயகாந்த மொட்டை போட்டுக்கொள்வார். எங்கள் கூட்டணி மக்களுடன் நல்லமுறையில் கூட்டணி வைத்திருக்கிறது. நல்ல உறவும் இருக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள் எனவே தமிழகத்தில் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்ததாக கருணாநிதி கூறுகிறார். அந்த வேனில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படத்தை போட்டுக்கொள்ள வேண்டியதுதானே.
ரஜினிகாந்தை நரேந்திரமோடி சந்தித்ததில் பெரிய விசயம் எதுவுமில்லை. மு.க.அழகிரி கூடத்தான் ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினிகாந்தை தினமும் ஒரு சாதாரண நடிகை கூட சந்தித்து பேசுகிறார். அதற்காக தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். மோடி மஸ்தான் அலை கூட வீசவில்லை. நரேந்திரமோடிக்கே தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. நரேந்திமோடி ஏன் 2 தொகுதிகளில் போட்டியிடவேண்டும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வில்ஸ் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு