எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸா, ஜூலை.28 - ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளையில், காஸாவைத் தாக்கும் இஸ்ரேல் டேங்கர்கள் வாபஸ் பெறும் வரை, ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இணங்க முடியாது என்று ஹமாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. நடுவே ஒருநாள் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
பாலஸ்தீன பகுதியில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். இஸ்ரேல் பகுதி மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதே இஸ்ரேலின் ஒரே பதிலாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து 12 மணி நேரம் மட்டும் போரை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. கேட்டுக் கொண்டதற்கு இணங்க 12 மணி நேரத்திற்கு போரை நிறுத்தியுள்ளோம். இதை மீறி ஹமாஸ் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஏராளமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்படுகின்றன. எனினும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. தரை வழியாக நாங்கள் முன்னேறியுள்ள பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களை அழித்து வருகிறோம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்குக் கரை பகுதியில் வன்முறை வெடித் துள்ளது. இதில் இஸ்ரேல் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லா, பெத்லஹேம் ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அதிகபட்சம் 7 நாட்களாவது போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பிரான்சில் நடைபெற்றது. எனவே விரைவில் மேலும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து 24 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தமது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆனால், காஸா நிலைகளில் இருந்து இஸ்ரேலிய டேங்கர்கள் விலக்கிக்கொள்ளப் படாத நிலையில், மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்தில் எந்த பலனும் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.