முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் போடோ தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஆக 21 - அசாமில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 5 போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அசாமில் போடோ தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை தடுக்க உள்ளூர் போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை அசாமின் கிராங் மாவட்டத்தில் ராயமகி என்ற இடத்தில் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் நுழைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 5 போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள், 6 பத்திரிகைகள், 5 கையெறி குண்டுகள், 60 ரவுண்டு வெடி பொருட்கள், ரூ. ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அசாம் - நாகாலாந்து எல்லை பகுதியில் போடோ லேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து பிரிந்து சோங் பிஜித் என்ற அமைப்பினர் தனியாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள்தான் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்