முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக் மோசடி வழக்கில் டைரக்டர் சரண் கைது

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

நெல்லை, ஆக.22 - ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் சிவகாசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து டைரக்டர் சரண் நேற்று நெல்லையில் கைது செய்யப்பட்டார்.
காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜாஎம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ஆயிரத்தில் இருவன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுண் காவல் நிலையத்தை சேர்ந்த தனிப்படையினர் வந்தனர். உடனே சரண் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு போலீசாரிடம் விளக்கம் கேட்டார். அவர்கள் ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் உங்களுக்கு சிவகாசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த உங்களை கைது செய்கிறோம் என்றனர். இதனையடுத்து போலீசார் டைரக்டர் சரணை கைது போலீஸ் வேனில் சிவகாசி நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. செக் மோசடி வழக்கில் டைரக்டர் சரண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்