முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறமைகளை பயன்படுத்துங்கள்: என்ஜினியர்களுக்கு வேண்டுகோள்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.16 - தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்குமாறு பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று விஞ்ஞானி எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்ததினம். அவரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 15-ம் தேதி, பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி: "தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்க வேண்டும்.

கடின உழைப்பு, ஆராய்ச்சிகள், புத்தாக்கம் மூலம் நமது பொறியாளர்கள் நாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்" என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்