முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா சமாதியில் சோனியா - ராகுல் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ 1 - இந்திரா நினைவுதினத்தையொட்டி அவரது சமாதியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சோனியா, மன்மோகன், ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார். நேற்று அவரது 30ம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. டெல்லியில் இந்திரா சமாதி அமைந்துள்ள சக்தி ஸ்தலத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இதில் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, வீரப்ப மொய்லி, சுஷில்குமார் ஷிண்டே, அகமது படேல், பூபிந்தர் சிங் ஹோடா, குலாம்நபி ஆசாத், திக்விஜயசிங், ஷகீல் அகமது மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு இந்திரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்