முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருப்புக்கோட்டையில் மாணவன் வகுப்பறையில் குத்திக் கொலை

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை - அருப்புக்கோட்டையில் நேற்று காலை 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி வகுப்பறையிலேயே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை பந்தலக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார் பாஸ்கரன் (13), நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். வகுப்பறைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கே அமர்ந்திருந்த பாஸ்கரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பாஸ்கரனின் முகம், தலையில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக மாணவன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாணவன் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த மாணவனின் உறவினர்கள் குற்றவாளியை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பாஸ்கரன் மிகவும் சாதுவான பையன் என்றும் இந்தக் கொலைக்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை போலீஸார் உடனடியாக விசாரிக்கவும் வலியுறுத்தினர். சம்பவம் தொடர்பாக பந்தல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து