எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களை நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான கார்த்திக், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது. ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட சண்முகசுந்தபுரம் கிராமத்தில் 200.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோள பயிர், தேனி வட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோளப் பயிர், ஜங்கால்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் 3.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோள பயிர், 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான கம்பு பயிர், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் பயிர், 11.60 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான உளுந்து பயிர், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் கிராமத்தில் 10.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் பயிர், சிலமலை கிராமத்தில் 5.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் மற்றும் கம்பு பயிர்கள், பூதிப்புரம் கிராமத்தில் 20.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பருத்தி பயிர், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எண்டபுளி கிராமத்தில் 37.50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான எள், உளுந்து, பாசிப் பயிர்கள் ஆகிய பாதிப்புக்குள்ளான பயிர்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
வனத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழக அரசு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களை அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்கள் கணக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பருவ மழை, இயல்பான மழை அளவை விட குறைவாக பொய்த்ததன் மூலம் முல்லைபெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. மேலும், பயிர் பாதிப்புக்களை துல்லியமாக கணக்கீடு செய்திட கைபேசியின் மூலம் புவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பயிர் பாதிப்புகள் குறித்து புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் மாவட்ட கலெக்டர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதால் பயிர் சேதங்கள் குறித்து துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள 113 வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்டு, பாதிப்புக்குள்ளான அனைத்து பயிர்களையும் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து அரசுக்கு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
ஆய்வுக்குப்பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பயிர் பாதிப்பு கணக்கீடு பணிகள் குறித்து, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான அ.கார்த்திக், மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளின் போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், எஸ்.டி.கே.ஜக்கையன், கே.கதிர்காமு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சந்திரசேகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, உதவி ஆணையர் (கலால்) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வடிவேல், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.