முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள்விழா

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் நகர் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்.பிறந்தநளர் விழா நூற்றாண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

      மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை மாநிலம் முழுவதும் ஆண்டு முழுவதும் கொண்டாட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா நகர் கழகத்தின் சார்பில் அரண்மனை பகுதியில் நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.முனியசாமி, நகர் செயலாளர் அங்குச்சாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா சசிக்குமார், முன்னாள் நகர் செயலாளர் வரதன், முன்னாள் பாசறை செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதாபேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், நகர் அ.தி.மு.க. பிரமுகர் செல்வராஜ்சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வீரபாண்டியன், நகர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

       தொடர்ந்து நகர் கழகத்தின் சார்பில் நகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நகர் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வார்டுகள் தோறும் அ.தி.மு.க கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதுதவிர, நகர் முழவதும் அனைத்து தெருக்களிலும் அந்தந்த வார்டு கிளை செயலாளர்கள் சார்பில் எம்.ஜி.ஆரின் திருஉருவபடம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்