முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் 68வது குடியரசு தினவிழா:

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-  நாட்டின் 68வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் தேசியக் கொடியேற்றி,இனிப்புகள் வழங்கி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள்:
 இந்திய தாய்த்திருநாட்டின் 68வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதிலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் குடியரசு தினவிழா தேசியக்கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் (பொ),நகராட்சி பொறியாளர் சக்திவேல் தலைமையேற்று கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்தார்.அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் ராஜமோகன்,சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார்,சிக்கந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் ஆணையாளர் (பொ)சக்திவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெற்குத்தெருவிலுள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வட்டாட்சியர் மலர்விழி தலைமையேற்று கலந்து கொண்டு கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து சிறைத்துறை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கும் திருமங்கலம் கிளைச்சிறையில் உள்ள கைதிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 கண்கவர் கலைநிகழச்சிகள்:
 திருமங்கலம் நகர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாட்டின் 68வதுகுடியரசு தினவிழாவில் திருமங்கலம் சார்பு- நீதிமன்ற நீதிபதி முத்துக்குமார் கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி குடியரசுதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.இதே போன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழச்சியில் ஆணையாளர் எஸ்.சோனாபாய் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.திருமங்கலம் நகர் விருதுநகர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ நல்லமேயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சபைகுரு ரஞ்சன்கனகமணி தேசியக்கொடியேற்றி வைத்து சபை மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.திருமங்கலம் கிளைநூலகத்தில் நடைபெற்ற விழாவில் கிளைநூலகர் இளங்கோ தேசியக் கொடியேற்றி வைத்து வாசகர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இதே போன்று திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என் பள்ளிகள்,அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,அரசு கலைக் கல்லூரி,அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்கள்,ரயில்நிலையம்,கப்பலூர் டோல்கேட்,ராஜா சித்தா மருந்தக வளாகம்,அசேபா தொண்டு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியேற்றியும்,இனிப்புகள் வழங்கியும் கோலாகலமான கொண்டாட்டங்களும்,கண்கவர் கலைநிகழச்சிகளும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்