எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
இ.மதுசூதனன் தொகுதி முழுவதும் சூறவாளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொளுத்தும் வெயிலிலும் வீடு வீடாக சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் இ.மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- மக்களின் எண்ணங்களை உணர்வுகளை தொகுதி முழுவதும் சுற்றி அலசி ஆராய்கின்றவர்கள் நீங்கள். நீங்கள் தான் அந்த உண்மையை மறைக்காமல் நாட்டுக்கு சொல்ல வேண்டும். முழு பூசணிக்காயை யாராலும் சோற்றில் மறைக்க முடியாது எனது வெற்றி வாய்ப்பானது அண்ணன் ஓ.பி.எஸ். தலைமையின் மூலமாக பிரகாசமாக உள்ளது. அம்மா அவரது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். 2015-ம் ஆண்டு அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என்னைத்தான் மாற்று வேட்பாளராக நிறுத்தினார். அதன்பின் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அம்மா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோதும் என்னைத்தான் மாற்று வேட்பாளராக அறிவித்தார். அது மட்டுமின்றி என்னுடைய வெற்றிப் படிவத்தை அதிகாரியிடம் நீ தான் பெற்று என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட தலைவிதான் புரட்சித்தலைவி அம்மா.போயஸ் தோட்ட இல்லத்தில் நான் வெற்றி படிவத்தை அவரிடம் கொடுத்த போது, மகிழ்ச்சியின்றி பெற்றுக்கொண்டார். எல்லோரையும் விலகி நிற்க சொல்லி விட்டு உணர்ச்சி பெருக்குடன், அதனை வெளிக் காட்டாமல் மது, நான் உன்னிடம் நிறைய பேச வேண்டியுள்ளது ஒட்டு மொத்த சென்னை மாவட்டத்தில் நம் கட்சியை சீர் குலைத்து விட்டார்கள். அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதனை மோப்பம் பிடித்த சசிகலா கூட்டம் கடைசி வரை அப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை அம்மா நின்ற போது மாற்று வேட்பாளர் நான்தான். புரட்சித்தலைவி அம்மாவின் பரிபூரண நல்லாசி என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கவில்லை.
கே:- டி.டி.வி. தினகரனைப் பற்றி தங்களின் கருத்து?
ப:- முதன் முதலில் அம்மாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த தினகரன். அம்மாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவர் தான் இந்த டி.டி.வி தினகரன். அம்மா இருக்கும் வரை போயஸ் தோட்டம் பக்கமே எட்டி பார்க்காத இந்த தினகரனைத்தான் சசிகலா காலையிலே கழக உறுப்பினராக்கிறார். மாலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆக்குகிறார். இன்றைக்கு இடைத்தேர்தலிலே வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போட்டு சட்ட மன்ற உறுப்பினராகலாம் அதன் மூலம் தமிழக முதலமைச்சராக திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கே:- தாங்கள் வெற்றிப் பெற்று வந்தவுடன் தொகுதி மக்களுக்கு ஆற்றக்கூடிய முதல் பணி என்னவாக இருக்கும்?
ப:- அம்மா ஆற்றியிருக்கின்ற திட்டங்களே எங்களின் வெற்றிக்கு முதல் காரணமாகும். நாளை . ஓ.பி.எஸ். தலைமையில் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க ஆட்சி நிச்சயம் அம்மா அவர்களின் நல்லாசியுடன் அமையும்.இப்போது மேலோங்கியுள்ள முதல் பிரச்சினை குடிநீர் பஞ்சம் அதனை அறவே போக்க பாடுபடுவேன். சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற் கொள்வேன். தங்குவதற்கு வீடின்றி, தவிப் போர்க்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பெற்று தந்து குடிய மர்த்துவேன். பல ஆண்டு காலம் பட்டா கிடைக்க பெறாதவர்களுக்கு பட்டா பெற்று தருவேன்.1991 முதல் 1996 வரை நான் இந்த தொகுதிக்கு செய்திருக்கின்ற திட்டங்களை இந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டும் என்று சொன்னால், பல ஆயிரம் கோடிகள் ஆகும். இதனை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். 21 ஆண்டு காலத்திற்கு பின்பும் என்மீது நன்றியுணர்வு கொண்டு நான் ஆற்றிய பணிகள் குறித்து சொல்லி, வாக்காள பெருமக்கள் என்னை திக்குமுக்காட வைக்கிறார்கள். அம்மா சொன்னதை போல் மக்களால் நான், மக்களுக் காகவே நான் என்று களப் பணியாற்றுவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு