முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு பிரதமர் பாராட்டு

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒரு சிறந்த நிர்வாகி என்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் கஷ்டங்களை போக்குவதில் சிறந்த முறையில் உதவி செய்து வருகிறார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வர்ஜினியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒரு சிறந்த நிர்வாகஸ்தராக இருக்கிறார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் யாராவது சிரமத்திற்கு உள்ளானால் உடனடியாக தலையிட்டு அவருக்கு உதவி செய்து மீட்கிறார். சமூக வலைதளங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாகும். அதனுடன் நானும் இணந்துள்ளேன். ஆனால் சமூக வலைதளங்களை திறமையாக கையாண்டு அதை தனது துறையை வலிமையாக்குவதில் கைதேர்ந்தவராக இருப்பதோடு திறமையான  அமைச்சராகவும்  சுஷ்மா திகழ்கிறார். உலகத்தில் எந்த நாட்டிலும் வாழும் இந்தியர்களில் யாராவது கஷ்டத்திற்கு உள்ளானால் அதை டுவிட்டரில் தெரிவித்தவுடன் உடனடியாக சுஷ்மா தலையிட்டு அவர்களின் கஷ்டத்தை போக்குகிறார். நாட்டில் ஏழைக்களுக்கெல்லாம் ஏழைகளுடன் அமைச்சர் சுஷ்மா நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் யாராவது நெருக்கடியில் இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ அதைப்பற்றி இரவு 2 மணிக்குக்கூட டுவிட்டரில் தெரிவித்தால் 15 நிமிடத்திற்குள்  நடவடிக்கை எடுத்து அதற்கு பரிகாரம் தேடி உதவுகிறார். இது அவரின் திறமையான நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் இந்திய வெளியுறவுத்துறை ஒரு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை உலகில் பல்வேறு நாடுகளில் சிரமப்பட்ட சுமார் 80 ஆயிரம் இந்தியர்கள், பத்திரமாக நாட்டுக்கு திரும்ப உதவி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட நபரால் துப்பாக்கி முனையில் தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்ட இந்திய இளம்பெண் உஷ்மா அகமத் மீட்கப்பட்டது ஒரு உதாரணமாகும். இதற்கு முக்கிய காரணம் சுஷ்மா சுவராஜ்தான்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து